<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12232190</id><updated>2011-10-02T02:17:59.808-07:00</updated><title type='text'>ஏகத்துவம்</title><subtitle type='html'>இஸ்லாம் தொடர்பான பதிவுகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-114491501365525611</id><published>2006-04-13T00:51:00.000-07:00</published><updated>2006-05-08T08:48:32.026-07:00</updated><title type='text'>பலதார மணம் - 5</title><content type='html'>பலதார மணத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது ?&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் 'ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்துவது திருக்குர்ஆன் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குர்ஆனின் மனைவியர் (அந்நிஸா ) என்னும் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனம் "... உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ , மூன்றோ, நான்கோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)." என்று சுட்டிக் காட்டுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அதே அத்தியாயத்தின் 129 ஆம் வசனத்தில், "(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது..." என்று மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு அனுமதியேயன்றி கட்டாயமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் 4:3 ல் "சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் &lt;strong&gt;ஒரு பெண்ணையே &lt;/strong&gt;(மணந்து கொள்ளுங்கள் )" என்று கூறுவதன் மூலம் ஒரேயொரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. மேலும் 4:129 ஆவது வசனத்தில் "சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது" என்று கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முந்தைய கால கட்டங்களில் பலதார மணத்திற்குத் தடையில்லாமல் இருந்தது . ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; இத்தனைதான் என்ற வரையறை என்பது இல்லாமலிருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு இஸ்லாத்தில் ஓர் ஆண் அதிக பட்சமாக நான்கு பெண்களை மட்டுமே திருமணம் செய் து கொள்ள முடியும் என்று வரம்பு கட்டியது. அதுவும் மனைவியரிடையே சமமான நீதி செலுத்த வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையோடுதான் பலதார மணத்திற்கு வரையறையுடன் கூடிய அனுமதி அளித்தது - &lt;strong&gt;அனுமதிதான்; கட்டாயமன்று&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரைக் கணவராக ஏற்றுக் கொள்வது அல்லது 'பொதுச் சொத்தாக மாறுவது' என்ற இரண்டைத் தவிர மூன்றாவது வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் (இரண்டாம் தாரமான) முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - (பொதுச் சொத்தாக மாறுவதான) இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் கூறும் ஒழுக்கமான உறவு நெறிகளைப் பின்பற்றினால் வெளிப் பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்த நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே சட்டப்படிச் செல்லுபடியாகின்ற பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமைதான் உருவாகும். &lt;br /&gt;ஒரு சட்டத்தை இயற்றினால் அது முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும். 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும் அது இந்த காலத்தின் நடைமுறைகளுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. "இஸ்லாமியச் சட்டங்களை ஏற்கக்கூடாது, ஏனெனில் அவை பழங்காலத்தவை" என்று கூறக்கூடியவர்கள், கூடா உறவுகளைத் தடுக்கக் கூடிய ஒரு மாற்று வழியை எடுத்து காட்ட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் கூற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதற்கு இன்னும் வேறு பல காரணங்கள் இருந்தாலும் - தங்களின் மானத்தை மட்டுமல்லாது - முக்கியமாகப் பெண்களின் மானத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை  வரவேற்க்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ கட்டளையிடவில்லை. மாறாக ஒரு ஆண் தான் விபச்சாரத்திற்கு சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறு அந்த மானகேடான காரியத்தை செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-114491501365525611?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/114491501365525611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=114491501365525611' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114491501365525611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114491501365525611'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/04/5.html' title='பலதார மணம் - 5'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-114335655981382341</id><published>2006-03-25T23:00:00.000-08:00</published><updated>2006-06-27T03:10:36.393-07:00</updated><title type='text'>பலதார மணம் - 4</title><content type='html'>&lt;strong&gt;பலதார மணத்தைப் பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன (2)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவில் எழுதப்படுகின்றவைகள் பிற மதங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்து மதத்தில் பலதார மணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை "ஒருவனுக்கு ஒருத்தி" என்கிற சித்தாந்தத்தைத்தான் கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் ( விஷ்ணுஸ்மிருதி 24:1)&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரெளபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட ( கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பலதார மணம் செய்து கொள்வதில் முன்னணியில் உள்ளவர் யார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி "1951ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர்" என்று கூறுகிறது. &lt;br /&gt;இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னணி வகிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1953 ஆம் ஆண்டுவரை இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டபூர்வமான தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட, 'ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது' என்று இந்து ஆண்களைத் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே தவிர இந்து வேதங்களன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-114335655981382341?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/114335655981382341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=114335655981382341' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114335655981382341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114335655981382341'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/03/4.html' title='பலதார மணம் - 4'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-114304439158114674</id><published>2006-03-22T08:17:00.000-08:00</published><updated>2006-03-22T08:19:51.606-08:00</updated><title type='text'>பலதார மணம் - 3</title><content type='html'>&lt;strong&gt;பலதார மணத்தைப் பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன? (1)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவில் எழுதப்படுகின்றவைகள் பிற மதங்களிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நோக்கிலோ அவற்றை விமர்சிப்பதற்கோ எழுதப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யூத, கிறிஸ்தவ மதங்களில் பலதார மணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பைபிள் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக , பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).&lt;br /&gt;&lt;br /&gt;2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).&lt;br /&gt;&lt;br /&gt;3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).&lt;br /&gt;&lt;br /&gt;4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8). &lt;br /&gt;&lt;br /&gt;5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக்' (TALMUDIC) பரிந்துரைக்கிறது.&lt;br /&gt;பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது . &lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது ? &lt;br /&gt;&lt;br /&gt;பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் 'பலதார மணம் பற்றி மறுஆய்வு' என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: "ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதார மணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை.' Eugee oillman, Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches (New York: Ornis Nooks, 1975- p.140). மேலும், யூத சமூகத்தில் பலதார மணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற, ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) கீரேக்க-ரோம கலாச்சாரத்தை அனுசரித்தே பலதார மணத்தை சர்ச் தடை செய்தது என்ற உண்மையை பாதல் ஊஜீன் ஹில்மேன் நம் கவனத்திற்கு க் கொண்டு வருகிறார். நம்முடைய இக்காலத்தில், மற்றொரு திருமணம் செய்வது தடை செய்யப்படுவதற்கு ரோம பழக்கவழக்கமே முன்னுதாரணம் எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;"பலதார மணம் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சசைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். The Weekly Review, Aug. 1, 1987. ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றிக் கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்க சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வேறொரு திருமணம் செய்து கொள்ளும் முறையில், ஆதரவற்றுத் துன்பத்துக்குள்ளாகும் மனைவி, மக்களைக் கருத்தில் கொள்ளும் போது, பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது' எனத் தீர்மானித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;பைபிள் சில நேரங்களில் நிர்ப்பந்த பலதார மணத்திற்கு அனுமதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க) &lt;br /&gt;பைபிளில் 'ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் - கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன . &lt;br /&gt;&lt;br /&gt;யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான 'தல்முதிக்' (TALMUDIC) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர், பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-114304439158114674?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/114304439158114674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=114304439158114674' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114304439158114674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114304439158114674'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/03/3_114304439158114674.html' title='பலதார மணம் - 3'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-114266389188063389</id><published>2006-03-17T22:36:00.000-08:00</published><updated>2006-03-21T10:52:10.080-08:00</updated><title type='text'>பலதார மணம் - 2</title><content type='html'>&lt;strong&gt;ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முந்தைய பதிவில் ஒரே சமயத்தில் பெண்கள் பல ஆண்களைத் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை விரிவாகக் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, ஆண்கள் பலதார மணம் செய்வதைப் பற்றித் தர்க்க ரீதியான காரணங்களை முதலில் பார்த்து விட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதையும் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002) &lt;br /&gt;&lt;br /&gt;1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குத் திருமணமே நடக்காது என்றெண்ணித் தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தம் பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாறிக் கற்பிழந்து வருகின்றனர்.&lt;br /&gt;மேலும் உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய மனமில்லாத அயல் விரும்பி விபச்சாரன்களின் உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரித்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையிலேயே ஆணிணமும் பெண்ணிணமும் பெரும்பாலும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தியுடன் எதிர்க்கும் தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் மரணிப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தாம் அதிகமாக மரணிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-114266389188063389?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/114266389188063389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=114266389188063389' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114266389188063389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114266389188063389'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/03/2_17.html' title='பலதார மணம் - 2'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-114214618390871425</id><published>2006-03-11T22:38:00.000-08:00</published><updated>2006-03-19T00:01:15.660-08:00</updated><title type='text'>பலதார மணம் - 1</title><content type='html'>நான் கீழே குறிப்பிட்டிருக்கின்ற செய்திகளில் பல &lt;a href="http://www.irf.net"&gt;இந்த&lt;/a&gt; வளைதலத்திலிருந்து தொகுத்தவை. இன்னும் சில செய்திகள் எனது சிற்றறிவுக்கு சரியெனப் பட்டு எழுதியவை. நான் எழுதியவற்றில் ஏதேனும் தவறிருப்பின் அவை என்னையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும் . இருபாலருக்கும் பொதுவான பலதார மணத்தை பாலிகேமி (POLYGAMY) என்பார்கள். இந்த பாலிகேமி என்பது பால் வேற்றுமைகளின் அடிப்படையில் இருவகைப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. முதலாவது வகை - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை பாலிஜினி (POLYGYNY) என்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2. இரண்டாவது வகை - ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையின் கருவான &lt;br /&gt;முதலாவது வகை, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகப்படியாக நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது குவாட்ரோஜினி (QUADROGYNY) இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண்கள் பல ஆண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் தடை செய்வது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதிக்கும் இஸ்லாம், பெண்களுக்குத் தடை செய்வது ஏன்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அக்கேள்விக்கு விடை காணும் முயற்சியில் எனது சிந்தனையோட்டமே இக்கட்டுரை. இந்த தலைப்பு தொடர்பாக &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" target="_blank" href="http://suttuviral.blogspot.com/2005/11/blog-post.html"&gt;முதலாவது&lt;/a&gt;, &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" target="_blank" href="http://suttuviral.blogspot.com/2005/11/2.html"&gt;இரண்டாவது&lt;/a&gt; என இரண்டு பதிவுகள் சுட்டுவிரல் அவர்கள் பதிந்துள்ளதையும் உங்களின் நினைவுக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கமாகும். ஆணையும் பெண்ணையும் சமமாகவே படைத்த இறைவன், ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் இயல்புகளையும் கொடுத்துள்ளான். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும் பொறுப்புகளும் உள்ளன. ஆண்களும் பெண்களும் சமமானவர்களே (Equal) தவிர - அனைத்து விசயங்களிலும் ஒரே மாதிரியான தன்மையுடையவர்கள் (Identical) அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருந்தால் - ஒவ்வொரு மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகள் ஒரே தந்தைக்குத்தான் பிறந்தது என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயத்தில், ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எவ்விதச் சோதனையுமின்றி எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை - இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதானதாக இல்லை. வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் டி.என்.ஏ பரிசோதனை செய்வதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளைச் செய்வது உடலியல் ரீதியாக ஆணுக்கு மிக எளிதாகும். பல ஆண்களைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணால் - மனைவி என்ற முறையில் - தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஒரு பெண், மாதவிலக்காகும் கால கட்டங்களில் மனோ ரீதியாகவும் நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் ஏராளமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;பல கணவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்சனை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணுக்கு ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஒரே தந்தையான அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு, ஓர் ஆண் பத்து பெண்களுடன் ஓர் ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்தப் பத்து பெண்களும் பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வாய்ப்பிருக்கின்றது. அதே சமயத்தில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் பத்து குழந்தைகளைப் பெற முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. (இதனை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்பது வேறு விசயம்.)&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. இது போன்று இதுவரை அறியப் படாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். இது போன்ற காரணங்களினால்தான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவனை மணவிலக்கு செய்த பின்னர் குறிப்பிட்ட தவணைக்குப் பிறகு வேறொரு ஆணை மணமுடிக்கவும் இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை; மேலும், கணவனில்லாத பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-114214618390871425?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/114214618390871425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=114214618390871425' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114214618390871425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114214618390871425'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/03/1.html' title='பலதார மணம் - 1'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-114103464178888989</id><published>2006-02-27T01:59:00.000-08:00</published><updated>2006-03-03T12:31:13.386-08:00</updated><title type='text'>நான் சொல்லவில்லை...</title><content type='html'>&lt;strong&gt;மானிட சமத்துவம் என்ற புத்தகத்தில் T.P. கணபதி அவர்கள் எழுதியதிலிருந்து...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஹரிஜனங்களுக்கு சம உரிமை&lt;br /&gt;அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஹரிஜனங்களுக்கு சமஉரிமை என்பது வெறும் ஏட்டளவில் தான்! அப்படிச் சமஉரிமை நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் மகாத்மா காந்திக்கு இணையான இந்த நாட்டில் அரசியல் சாசனம் இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ஹிந்து மதத்தைவிட்டு விலகி புத்த மதத்திற்கு மதம் மாறவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.ஜெகஜீவன்ராம் அவர்களும் மகாத்மா காந்திக்கு இணையான ஒரு பெரிய தலைவர். இவரும் ஒரு ஹரிஜன். முன்னாள் உ.பி. முதல்வராக இருந்த காலஞ்சென்ற சம்பூர்ணாந்தின் உருவச் சிலையை (மனிதனின் சிலையை) ஹரிஜன தலைவர் ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். அதனால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாம்! காசியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அந்தச் சிலை கழுவி சுத்தி செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீனாட்சிபுரத்தில் 560 ஹரிஜனங்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது பற்றி தமிழ்நாடு ஷெடியூல் ஜாதிகள் இயக்குனர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்: பொதுவாக ஹிந்து சமூகத்தில் அனுஷ்டிக்கப்படும் தீண்டாமை, அலட்சியம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ஹரிஜனங்கள் நெடுங்காலமாகப் பாரபட்சமாக நடத்தப்படுவதே அவர்களுடைய மத மாற்றத்துக்குக் காரணம் என்பது தெளிவு. அவர்கள் தாங்களாகவே மதம் மாறினரே தவிர எத்தகைய நிர்ப்பநதமோ, ஆசை வார்த்தையோ, தூண்டுதலோ அதற்குக் காரணம் அல்ல என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெயர் மாற்றத்தால் ஜாதிக் கொடுமை ஒழிகிறது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதிக் கலவரங்களைத் தவிர்க்க கலகங்களால் மாற்ற முடியாத, பல சட்டங்கள் போட்டும் அதன் மூலம் மாற்ற முடியாத, தாழ்த்தப்பட்டவன் என்ற கடுஞ்சொல்லை ஒரே ஒரு பெயர் மாற்றத்தால் மாற்ற முடியும்: அத்தோடு ஜாதிக் கொடுமையும் ஒழிகிறது என்பதை ஹரிஜன மக்கள் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிராமத்துக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்திருந்தால், அவர் என்ன ஜாதி என்று தெரிந்துக்கொள்ள எல்லா ஜாதியினரும் ஆர்வம் காட்டுகின்றனர்! அவர் பெயர் பரமசிவம் என்று சொன்னால் அது ஹிந்துப் பெயர். ஆதலால் அவர் என்ன ஜாதி என்று தெரிந்துகொள்ளும் வரை விடுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதிகாரியின் பெயர் அந்தோணி என்று சொன்னால், அது கிறிஸ்துவப் பெயர் கிறிஸ்துவராக இருந்தாலும் என்ன ஜாதி கிறிஸ்துவர் என்று தெரிந்து கொள்ளும் வரை விடமாட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதிகாரியின் பெயர் அப்துல் காதர் என்று சொன்னால் எல்லோரும் புது அதிகாரியாக பாய் வந்திருக்கிறார் என்று பேச்சை முடித்துவிடுகிறார்கள். இதில்மேற்கொண்டு அவர் என்ன ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை! கருப்பையா ஹரிஜன் தாழ்த்தப்பட்டவன். அதே கருப்பையா இஸ்லாத்தைத் தழுவி அப்துல் காதர் என்று பெயரைச் சூட்டிக் கொண்டால் அவன் ஹரிஜன் என்பதிலிருந்தும், தாழ்ந்தவன் என்ற கடுஞ்சொல்லில் இருந்தும் விலக்கப்பட்டு உயர் அந்தஸ்த்தைத் தானாக அடைந்துவிடுகிறான் என்பதை ஹரிஜன மக்கள் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆலய வழிபாடு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஹிந்து மதப் பெரிய ஆலயங்களில் நாம் பார்க்கிறோம்: பணக்காரர்கள், மந்திரிகள், பெரிய அதிகாரிகள் ஆகியோர் மூலஸ்தானத்துக்கு முன்புவரை அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு ஆலய மரியாதைகள் செய்யப்படுகின்றன. ஆனால் ஏழை ஆண், பெண் இரு பாலரும் வரிசையில் நின்று இடித்துத் தள்ளிக் கொண்டு நெரிசலில்தான் சாமி கும்பிட முடிகிறது. ஹிந்து ஆலய வழிபாட்டில் ஏழை, பணக்காரன், அதிகாரிகள், மந்திரிகள் என்ற பாகுபாடு உண்டு. ஹிந்து மதத்தில் ஜாதி வாரியாகத் தனித்தனி ஆலயங்களும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துவ மதத்திலும் பல ஜாதிகள் இருக்கின்றன். உயர்ந்த ஜாதி கிற்ஸ்துவர், தாழ்த்தப்பட்ட ஜாதி கிறிஸ்தவர் என்று இருப்பதால் அங்கும் ஜாதி வாரியாகத் தனித்தனி ஆலயங்கள் இருக்கின்றன. இங்கும் பாகுபாடு காட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் மார்க்கத்தில் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை பற்றி பார்ப்போம்: முதலில் வரிசை வரிசையாக மேற்கே பார்த்து நிற்க வேண்டும். இன்று இஸ்லாத்தை தழுவியவனாக இருந்தாலும் சரி, ஏழையானாலும் சரி அவர்கள் முன் வரிசையில் நின்றுவிட்டால், அவர்களைப் பின் வரிசைக்குப் போ என்று சொல்லக் கூடாது. மந்திரியானாலும், பணக்காரனானாலும், அதிகாரிகளானாலும் தொழுகைக்கு வந்தால் முன் வரிசையில் இடம் இல்லாவிட்டால் பின் வரிசையில்தான் நிற்கவேண்டும். இவர்களுக்காக வழிவிடச் செய்து முன் வரிசைக்குக் கொண்டு போகக் கூடாது. ஒன்றே குலம்: ஒருவனே தேவன்! என்ற சொல் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுக்குத்தான் பொருந்தும். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதும், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாததும் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றில் தான்! இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. மானிட சமத்துவம் இஸ்லாத்தில் தான் கொடுக்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-114103464178888989?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/114103464178888989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=114103464178888989' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114103464178888989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/114103464178888989'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/02/blog-post.html' title='நான் சொல்லவில்லை...'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-113696117408704571</id><published>2006-01-10T22:29:00.000-08:00</published><updated>2006-02-01T00:18:56.123-08:00</updated><title type='text'>என்னை கவர்ந்த இஸ்லாம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;முஹம்மத் அஸத்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார்.&lt;br /&gt;லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.வைதீக யூதக் குடும்பத்தில் உதித்த ஓர் இளைஞர் அம்மதக் கோட்பாடுகளை நல்லபடி கற்றுணர்ந்த ஓர் அறிவாளி ஐரோப்பிய நாகரிகத்தில் ஊறிப் போயிருந்த ஒரு மேலை நாட்டவர் முஸ்லிமானதுடன் மட்டுமின்றி இஸ்லாத்தின் சட்ட நுட்பங்களை எடுத்து விளக்கும் மேதை என்று புகழப்படும் அளவுக்கு மாறியது எப்படி? இதைத் தெரிந்துகொள்வது அதுவும் அவர் வாயிலாகவே தெரிந்து கொள்வது நல்லதல்லவா?&lt;br /&gt;பைபிளின் படைய ஏற்பாட்டிலும் தல்மூதிலும் வருணிக்கப்பட்டிருக்கும் "இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மீது மட்டுமே அக்கறை கொள்பவனாக இருக்கிறான்". அப்படியானால் இதர மக்களைப்பற்றி அந்த ஆண்டவனுக்குக் கவலை இல்லையா? இக்கேள்விக்கு வைஸ்ஸின் உள்ளத்தில் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. எல்லோரும் யூதர்களாக முடியாது. பிறப்பினால் தான் யூதனாக முடியும். யூதர்களாக முடியாத ஏனைய மக்களின் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ளும் இறைவன் யார்?&lt;br /&gt;ஒரு யூதப் பெண் அல்லது கிறிஸ்துவப் பெண் ஒரு முஸ்லிமை மணந்து, கணவன் வீட்டில் குடித்தனம் நடத்த வருகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் யாரை ஒரு புனிதமான மனிதராக தேவகுமாரனாக மதிக்கிறாளோ, அதே மனிதரை அந்த முஸ்லிமும், அவர் குடும்பத்தினரும் புனிதமானவராகவும் இறைவனின் தூதராகவும் மதிப்பதைக் காண்கிறாள். முந்தய நபிமார்களை முஸ்லிம்கள் அவதூறாகப் பேசுவதை அவள் காணவே முடியாது. மாறாக, ஒரு முஸ்லிம் பெண், ஒரு யூதனின் அல்லது கிறிஸ்துவனின் மனைவியாக குடித்தனம் நடத்தச் சென்றால், இவள் யாரை இறைவனின் இறுதித் தூதரென்று நம்பி மரியாதை செய்கிறாளோ அந்தத் தலைவரை அவள் கணவனும், அவர் வீட்டாரும் இகழ்வதைத்தான் காண்கிறாள்.&lt;br /&gt;அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இந்த இறுதித் தூதரை இழிவாகப் பேசுவதைத் தன்னுடைய காதுகளாலேயே கேட்கவும் நேரிடுகிறது. ஏனேனில் தந்தையின் மார்க்கத்தைத்தானே பிள்ளைகள் பின்பற்றுவது வழக்கம். இம்மாதிரியான அவச்சொல்லுக்கு ஒரு முஸ்லிம் பெண்ணை இலக்காக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?&lt;br /&gt;எகிப்தியரின் பதிலைக் கேட்டுவிட்டு கிரேக்கர் வாயடைத்துப் போனார். பதில் சொல்ல முடியவில்லை. இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயமும் உண்டு. இந்த எகிப்தியர் எழுதப் படிக்கத் தெரியாதவர். தமது சமயோசித அறிவின் மூலமே கிரேக்கரின் கேள்விக்குத் தக்க விடை அளித்திருக்கிறார். எப்படியிருப்பினும், இது நல்ல பொருத்தமான பதில்தான் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;முஸ்லிம்கள் இஸ்லாத்திற்குப் பெருமை தேடித்தரவில்லை. இஸ்லாம் தான் முஸ்லிம்களுக்குப் பெருமை தேடித் தந்தது. நபிகள் நாயகமவர்கள் அறிவுறுத்திய உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றி வந்த வரை முஸ்லிம்கள் வெற்றி முனையின் பக்கமே இருந்தார்கள். இதை விடுத்து அவர்கள் அப்பால் செல்லச் செல்ல பேரும் புகழும் அவர்களை விட்டு நகர்ந்துகொண்டே போயின. இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது தெள்ளென விளங்கும்.&lt;br /&gt;என்றிலிருந்து நம்பிக்கை என்பது வெறும் சடங்காகி விட்டதோ, வாழ்க்கைத்திட்டம் என்பது சொல்லளவோடு நின்று விட்டதோ, உளமார உணர்ந்து செயலாற்ற வேண்டுமென்பது அறிவிற்கு வேலை கொடுக்காத ஒன்றாகி விட்டதோ, அன்றிலிருந்து முஸ்லிம்களும் ஒரு மாபெரும் சக்தியாகத் திகழத் தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-113696117408704571?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/113696117408704571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=113696117408704571' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/113696117408704571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/113696117408704571'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2006/01/blog-post.html' title='என்னை கவர்ந்த இஸ்லாம்'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-112261968091462067</id><published>2005-07-28T23:41:00.000-07:00</published><updated>2005-07-30T07:56:54.800-07:00</updated><title type='text'>திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2</title><content type='html'>&lt;p dir="ltr" align="left"&gt;&lt;b&gt;பூமியின் வடிவம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் நம்பிருந்தார்கள். 1607-ல் சர் பிரான்ஸிஸ் டிராக் என்பவர்தான் பூமி கோள வடிவமானது எனக் கண்டுபிடித்தார். இதனை ஜியாய்டு &lt;span style="font-family:Times New Roman;font-size:14;"&gt;(Geoid)&lt;/span&gt; என்ற பதம் கொண்டு குறிப்பர். திருக்குர்ஆன் இதனை அத்தியாயம் 31 வசனம் 29-ல் விளக்குகிறது, "நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புக செய்கின்றான்". இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகச் (நுழையச்) செய்தல் என்பதன் பொருள் சீராக மெதுவாக இரவைப் பகலில் நுழையச் செய்வதென்றால் பூமி தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே விளக்குகிறது. (கோளமாக இருந்தால் தான் மேற்கண்ட செயல் நடை பெற வாய்ப்பிருக்கிறது.) மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 5ஐ பார்த்தால்... அவன் இரவைப் பகலின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான் இன்னும் பகலை இரவின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "கவ்வர" என்ற அரபி வார்த்தையின் பொருள் சுருட்டுதல் என்பதாகும். சுருட்டுதல் எங்கு நடைபெற்றாலும் அது ஒரு கோள வடிவில் தான் நடக்க இயலும். &lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;br /&gt;தற்போது கண்டிபிடிக்கப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் 1400 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;b&gt;சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கிறது?&lt;/b&gt;&lt;/p&gt;&lt;b&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் சூரியனின் சிறுவடிவம் தான் சந்திரன் என்றும், இவை இரண்டிற்கும் சொந்தமாக ஒளி வீசும் திறன் உண்டு என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் சூரியனிலிருந்து ஒளியை வாங்கி சந்திரன் பிரதிபலிக்கிறது என்று தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமறைக்குர்ஆன் அத்தியாயம் 25 வசனம் 61ஐ கவனித்தோமானால் அதில் "ஒரு விளக்கை(ப் போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் பாக்கியமுடையவன்" எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் சூரியனை சுயமாக ஒளி வீசும்&lt;br /&gt;விளக்கு எனவும் சந்திரனை உள்வாங்கி பிரதிபலிக்கக் கூடியது என்றும் (சந்திரனுக்கு சுயமாக ஒளி வீசும் தன்மை இல்லை என்றும்) விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;b&gt;சூரியனின் சுழற்சி&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;சூரியன் தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று வருகின்றது. நாம் துல்லியமான தொலைநோக்கி கொண்டு பார்ப்போமானால் சூரியனில் கரும் புள்ளிகள் தெரியும். அதனை நாம் தொடர்ந்து கவனிப்போமானால் அந்தக் கரும்புள்ளிகள் ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்பதை அறியலாம். ஆகவே சூரியன் தன்னைத்தானே சுற்றுவதுடன் அதன் வட்டப் பாதையில் ஒரு முறை சுழன்று வருவதற்கு சுமார் 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என கணக்கிடலாம். இதனைத் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 33-ல் இன்னும் "அவன் எத்தகையவன் என்றால் (அவன்தான்) இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் (தத்தமது) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன" என்றும் கூறுகிறது. இந்த வசனத்தில் சூரியன் சந்திரன் அதனுடைய வட்டப் பாதையில் சுற்றுவதுடன் விண்வெளியில் தங்களுடைய பாதையில் இயக்கம் மேற்கொள்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில்&lt;br /&gt;ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது தான். &lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;b&gt;நட்சத்திரத்திற்கும் கோள்களுக்குமிடையிலுள்ள&lt;br /&gt;வித்தியாசம்?&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;நட்சத்திரங்கள் சூரியனைப் போல் சுய ஒளியை வீசுகின்றது. அதே வேளையில், கோள்கள் நாம் வாழும் பூமியைப் போன்று ஒளி வீசும் தன்மையற்றது என்பதை&lt;br /&gt;நாம் அறிவோம். இந்த விளக்கத்தை தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. நட்சத்திரத்தைப் பற்றி அத்தியாயம் 86 முதல் மூன்று வசனங்கள் கூறுவதை கவனியுங்கள். "வானத்தின் மீதும், இரவில் தோன்றக் கூடியதின் மீதும் சத்தியமாக! இரவில் தோன்றக்கூடியது&lt;br /&gt;என்னவென்று உமக்கு அறிவித்தது எது? பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்" மேலும் கோள்களைப் பற்றி அத்தியாயம் 37, வசனம் 6ல் அருகிலுள்ள வானத்தை கோள்களின் அழகைக் கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம் என்று கோள்களை அணிகலன்களாக வர்ணிக்கின்றது திருக்குர்ஆன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;b&gt;கண்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;கண்டிப்பாக! ஒரு காலத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பரப்பாகவே&lt;br /&gt;இருந்தது. ஒரு பெரு வெடிப்பிற்கு பிறகு பூமியினுடைய எல்லாப் பகுதிகளும் சிதறடிக்கப்பட்டது. ஆகவே உலகப் படத்தை நீங்கள் பாருங்கள். தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையும் ஒன்றிக்கொன்று பொருந்திக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பதைக் காணலாம். திருகுர்ஆன் 79வது அத்தியாயம் 30, 31வது வசனத்தில் மேலும் பூமியை அதன்பின் அவன் தான் விரித்தமைத்தான். அதிலிருந்து தண்ணீரையும் மேய்ச்சல் பொருளையும் வெளியாக்கினான் என்று விவரிக்கிறது. &lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;b&gt;புவியின் அடுக்குகள்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;மேலும் புவியியலில் புவி அடுக்குகள் பற்றி விஞ்ஞானம்&lt;br /&gt;என்ன கூறுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் நிலைப்புத் தன்மைக்கு காரணம் புவியின் மேற்பரப்பு, புவி அடுக்குகளை நிலைபெறச் செய்யவே மலைகள் இருக்கின்றன. &lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;br /&gt;இதனை திருக்குர்ஆன் அத்தியாயம் 78 வசனங்கள் 6, 7-ல் "பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் அமைக்கவில்லையா?" என்று கூறுகிறது. முளைகள் என்று இந்த வசனத்தில் கூறப்படுவதன் பொருள் பூமியில் உள்ள அடுக்குகள் முளைகள் மூலம் ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த முதல் வசனத்தில் பூமி தட்டையானது அல்ல விரிப்பாக உள்ளது எனக் கூறுகிறது. எனவே நாம் கீழே விழுந்து விடாமல் தொடர்ந்து நடக்க இயலும். மேலே சொன்ன இந்த விஷயம் திருக்குர்ஆனில் மேலும் அத்தியாயம் 21 வசனம்&lt;br /&gt;31-ல் "இன்னும் பூமி அவர்களைக் கொண்டு அசைந்து விடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம். அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளை நாம் ஆக்கினோம்". இதில் பூமி அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படாமல் நிலையாக இருக்க இந்த மலைகள் (முளைகள்) உதவி செய்கின்றன. அதன் காரணத்தால் தான் பூமி அதன் வட்டப்பாதையில் சீராக சுழன்று வருகின்றது. &lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;&lt;strong&gt;திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. இருப்பினும்&lt;br /&gt;அது அத்தாட்சிகளின் தொகுப்பு &lt;/strong&gt;&lt;span style="font-family:Times New Roman;font-size:14;"&gt;(Book of Signs)&lt;/span&gt;. உண்மையில் இதில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அத்தாட்சி (வசனங்)களில் ஆயிரம் மட்டுமே விஞ்ஞானத்தை விவரிக்கிறது. மெத்த படித்தவர்களுக்கும் மேலும் கடவுளை நம்பாதவர்களுக்கும் விஞ்ஞானம் தான் ஒரு அளவுகோலாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் தான் அளவுகோளாக அமைந்துள்ளது. &lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;திருக்குர்ஆனை புர்கான் என்றும் அழைக்கிறோம். இந்த அரபி வார்த்தையின் பொருள் என்ன என்றால் சரியென்றும், தவறென்றும் பிரித்து அறிவிக்கக் கூடியது என்பதாகும். படித்த மற்றும் நாத்திகர்களின் அளவுகோலாகிய அறிவியலை வைத்து திருக்குர்ஆனை நான் விளக்கினேன். ஆனால் அறிவியல் சமீப காலத்தில் தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன் 14 நூற்றாண்களுக்கு முன்பே இறக்கியருளப்பட்டது.&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p dir="ltr" align="left"&gt;இந்த மாதிரி அரிய உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆனில் எழுத படிக்க தெரியாத ஒருவரால் கூறியிருக்க முடியுமா? இதே போல் நவீன அறிவியல் உலகத்தால் மறுக்க இயலாத பல நூற்றுக்கணக்கான விஞ்ஞான உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-112261968091462067?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/112261968091462067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=112261968091462067' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/112261968091462067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/112261968091462067'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2005/07/2.html' title='திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-112231369674182052</id><published>2005-07-25T10:44:00.000-07:00</published><updated>2005-07-30T07:57:29.916-07:00</updated><title type='text'>திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்</title><content type='html'>&lt;div align="left"&gt;முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆனை இறைவனின் வார்த்தை எனவும் பரிசுத்தமான, எவராலும் எப்பொழுதும் மாற்ற இயலாத ஒரு வேதமென்றும் நம்புகின்றோம். மேலும் மலக்குகளின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆன் 23 ஆண்டுகள், சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டு, அவர்களுடைய தூதுத்துவ காலத்திலேயே முழுமைப் படுத்தப்பட்டது என்றும் நம்புகிறோம்....மேலும் இந்தக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் முழுமைப்படுத்தப்பட்டு, இன்று வரை மாற்றப்படாமல் இருக்கின்றது என்பது சரித்திரப் பூர்வமான உண்மையாகும். வரலாற்று ஆய்வாளர்களில் இஸ்லாத்தின் நண்பர்களாகட்டும் அல்லது இஸ்லாத்தின் எதிரிகளாகட்டும் அவர்கள் முயற்சி செய்து இது உண்மையானது தானா என்பதை ஆராயட்டும்...! &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்பதற்காண ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே தங்களுக்கு அறியத்தருகின்றேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) மற்றும் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory) &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உள்ள நம்பிக்கை போல் கடவுள் இருக்கின்றார் என்பதில் மக்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இருப்பதில்லை. ஒரு நவீன இயந்திரம் அல்லது ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவனை விட வேறு யாரேனும் அதைப் பற்றி; அதிகம் தெரிந்திருக்க இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது என்பது தான் பதிலாக இருக்கும். ஏனென்றால் கண்டுபிடித்தவன் அல்லது உருவாக்கியவனுக்குத்தான் அப்பொருளைப் பற்றிய முழு தொழில் நுட்பமும் தெரியும்.மேலும் இந்த உலகம் அல்லது இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பர்: தற்காலத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆரம்பத்தில் புகை மண்டலமாகத்தான் இருந்தது. இதனை முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) என விஞ்ஞானிகள் கூறுவர். பின்பு இது ஒரு பெருவெடிப்புக்கு (Cosmic or Secondary Explosion) உள்ளாகி சூரியனாகவும், நட்சத்திரங்களாகவும், கோளங்களாகவும் மற்றும் நாம் வாழும் பூமியாகவும் பிரிக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இந்த உண்மை 1973-ல் அறியப்பட்டு பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதனைப் பற்றி திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 21, வசனம் 30-ல் கீழ்கண்டவாறு விவரிக்கிறது."நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன பின்னர் நாமே அவைகளை பிரித்தமைத்தோம்". எனவே பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றி திருக்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போதாத திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதென்பதற்கு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடலில் உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றோடொன்று கலப்பதில்லை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;div align="left"&gt;விஞ்ஞானிகள், உப்புத் தண்ணீரும், நல்ல தண்ணீரும் ஒன்றுக் கொன்று கலப்பதில்லை எனக் கூறுகின்றனர். இந்த சூழ்நிலை உலகின் பல இடங்களிலும் உள்ளது. நைல் நதியின் மெடிட்டாரினியன் கடலில் கலக்கும் வளைகுடா இதற்கு ஒரு உதாரணமாகும். இதில் இந்த இரண்டு வகையான நீரும் கிட்டத்தட்ட 1000கீ.மீ தூரம் வரை இவ்வாறு செல்கிறது. இதனை திருக்குர்ஆன் 25வது அத்தியாயம் 53வது வசனத்தில் இன்னும் அவன் எத்தகையவனென்றால் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான் ஒன்று மிக்க சுவையானதும், தாகம் தீர்க்கக் கூடியது, மற்றொன்று உப்புக் கரிப்பானதும், கசப்பானதுமாகும். இவ்விரண்டிற்கிடையில் திரையையும் மீற முடியாத தடையையும் அவன் ஆக்கியிருக்கிறான். அத்தியாயம் 55 வசனம் 19,20 ல் இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டுவிட்டான். அவை இரண்டுக்கிடையில் தடுப்புண்டு அவ்விரண்டும் அதனை மீறிவிடாது. என்று மேலும் விளக்குகிறான். சில அரபிகள் கடலில் நீந்திச் சென்று இதனை பார்த்து அறிந்திருப்பார்கள் என்று நினைக்க வாய்ப்புள்ளது ஆனால் "கண்ணால் பார்க்க இயலாத திரை" என்று திருக்குர்ஆன் கூறுவதால் இன்று வரை யாராலும் பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;மழை நீரின் சுழற்சி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பெர்னாட் பால்ஸி என்பவர் தான் முதலில் 1580-ல் நீரின் தொடரான சுழற்சியைப் பற்றிச் சொன்னார்.இந்த நீரின் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் சுழற்சியினுடைய பல நிலைகளைக் குறிப்பிடுகின்றது. பூமியிலிருந்து தண்ணீர் மேலே சென்று, மேகங்களை உருவாக்கி, மேகங்கள் குளிர்ச்சியடைந்த அந்த நேரத்தில் மின்னல், இடிகளுடன் மழை பெய்வதை பின்வரும் வசனங்களில் விவரிக்கிறது. அத்தியாயம் 23, வசனம் 18ல் "இன்னும் வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், பூமியில் தேக்கி வைத்தோம். நாம் அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றல் உடையவராவோம்." மேலும், அத்தியாயம் 39 வசனம் 21ல் "நீர் பார்க்கவில்லையா? (அல்லாஹ் தான்) வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச்செய்கிறான்". அத்தியாயம் 24 வசனம் 43ல் "நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன் பின் ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர்....."&lt;br /&gt;மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 30 வசனம் 43ல் பார்த்தால், "அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவன் காற்றுகளை அனுப்பி வைக்கின்றான் பின்னர் அவை மேகங்களை ஓட்டுகின்றன. பிறகு தான் நாடியவாறு அதனை வானத்தில் பரத்துகிறான். அதனை பல துண்டுகளாகவும் ஆக்கிவிடுகின்றான், அதன் மத்தியிலிருந்து மழை வெளிவருவதை நீர் காண்கிறீர்..." எனக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-112231369674182052?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/112231369674182052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=112231369674182052' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/112231369674182052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/112231369674182052'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2005/07/blog-post.html' title='திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-111745236792655424</id><published>2005-05-30T04:19:00.000-07:00</published><updated>2005-05-30T04:38:09.036-07:00</updated><title type='text'>கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார் - 2</title><content type='html'>&lt;div align="justify"&gt;எனது இந்த பதிவை ஆரம்பிப்பதற்கு முன்னால் முஸ்லிம் நன்பர்களுக்கு அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.&lt;br /&gt;நன்பர் மயிலாடுதுறை சிவா May 16, 2005 அன்று எழுதிய "இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா?" என்கிற பதிவு மற்றும் பிற பல பதிவுகளின் பின்னூட்டங்களில் தேவையில்லாமல் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து எழுதியிருந்ததை படித்தேன். ஒரு விசயத்தைப் பற்றி ஆழ்ந்த, தீர்க்கமான அறிவு இல்லாமல் எதையோ நாம் எழுதப் போய் அதில் நாம் சில தவறுகளை செய்து விட்டால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி, மெருகேற்றி இஸ்லாம்தான் அதற்கு காரணம் என்று மக்களை முட்டாளாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது அனைவரும் அறிந்த உண்மையே. எழுதிய அனைவரையும் நான் குறை கூறவில்லை. ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் செய்ததாக மக்களிடையே பரப்பப்படுவதால் நீங்கள் எதை எழுதுகின்றீர்களோ அதனை தீர ஆலோசித்து அல்லது மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனைப் பெற்றபின் வேகத்தை விடுத்து விவேகத்தையும், நிதானத்தையும் கடைபிடித்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;strong&gt;முஸ்லாமல்லாத மாற்று மத நன்பர்ளே நடுநிலையுடன் சிந்திக்க வேண்டுகிறேன் !&lt;/strong&gt;&lt;br /&gt;எந்த மதகோட்பாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது மத கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும் ஒட்டு மொத்த மனித இனம் முழுவதும் ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு உண்மை என்னவென்றால் என்றாவது ஒரு நாள் மனிதன் தன்னுடைய மரணத்தை அடைந்தே தீருவான் என்பதுதான்.&lt;br /&gt;மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதில்தான் அனைவரும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம்.&lt;br /&gt;அதில் ஒன்று ...&lt;br /&gt;மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை என்பதெல்லாம் கிடையாது. இதெல்லாம் பூச்சாண்டி வித்தைகள் தான். மக்களை பயமுறுத்தி தங்களது சுய லாபத்தை அடைவதற்காக செய்த வீண் வேளைகள் தான் .... என்பது போன்று ஒரு சாராரின் வாதம்.&lt;br /&gt;மற்றொன்று ...&lt;br /&gt;மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. இவ்வுலகம் தான் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்காண பரிச்சைக் களம். அதில் நன்மை மற்றும் தீமைகளைப் பற்றி இறைவனின் கோட்பாடுகள் மற்றும் இறைதூதரின் போதனைகளைக் கொண்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளோம். யார் இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு நன்மையை செய்து தீமையை விட்டு தன்னை தடுத்தும் வருகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் என்றும், மாறு செய்பவர்களுக்கு நரகம் ... என்பது போன்று மறுசாராரின் வாதம் அமைந்துள்ளது.&lt;br /&gt;ஒரு வாதத்திற்காக மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்கை இல்லை என்று சொல்வது சரியென்று வைத்துக்கொள்வோமேயானால் அதனால் நஷ்டப்படுவது இரு சாராரும் இல்லை.&lt;br /&gt;அதே சமயத்தில் ...&lt;br /&gt;மறுசாராரின் வாதம் (அதாவது மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. இவ்வுலகம் தான் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்காண பரிச்சைக் களம்... போன்றவற்றை) சரியென்று வைத்துக்கொண்டால் அதில் நஷ்டப்படுவது நான் மேலே கூறிய முதல் சாரார் தான் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டு நடுநிலைமையுடன் சிந்தித்து செயல்படுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;மேலும் முஸ்லிம்கள், இஸ்லாம்தான் முழுமனித குலத்திற்கும் நேர்வழிகாட்டி அதுவல்லாத அனைத்தும் வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்கின்றது என்கின்றனர். இஸ்லாத்திற்கு எதிராக எழுதுபவர்கள் மற்றும் அதன் அடிப்படைவாதத்தை குறை கூறுபவர்கள் அனைவரும் இஸ்லாமும் வழிகேட்டின் பக்கமே மக்கள் அனைவரையும் வழிநடத்துகிறது என்கின்றனர். &lt;strong&gt;வழிகேடு என்றொன்றிருந்தால் நேர்வழியும் இருக்கத்தானே வேண்டும். &lt;/strong&gt;எனவே இஸ்லாம் மக்களை வழிகெடுக்கிறதென்றால் மக்களை திசை திருப்ப முயலாமல் உங்களுடைய நேர்வழியையும் ஆதாரத்தின் மூலமாக எடுத்து வையுங்களேன் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்தது நேசகுமார் 18.5.05 அன்று எழுதிய பதிவில் கீழ்கண்டவாறு கேள்வி கேட்டிருந்தார்&lt;/strong&gt;//...ஸஹீயான ஹதீதுகள் இவைதான் என்று முஸ்லிம் சமுதாயம் முழுவதும் ஒப்புக் கொள்ளும் ஒரு பட்டியல் இருக்கிறதா?&lt;br /&gt;எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு ஒத்த கருத்து இஸ்லாமியர்களிடையே இல்லை. ஒரு சாரார் சொல்வதை மறுசாரார் மறுப்பதும், ஒருவர் அளிக்கும் விளக்கத்தை மற்றவர்கள் மறுப்பதும் ...//&lt;br /&gt;உண்மைதான் நேசகுமார் அவர்களே! முஸ்லிம் சமுதாயம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு பட்டியல் இல்லைதான். மேலும் அப்படி இருக்கவும் வாய்ப்பில்லைதான் ஏனென்று சொன்னால் நம்முடைய (அகில உலகத்திற்கும்) இறை தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அப்படித்தான் &lt;em&gt;&lt;strong&gt;முன்னறிப்பு செய்தார்கள் அது என்னவென்றால் "... என்னுடைய சமுதாயத்தினர் 73 பிரிவினராக விரைவில் பிரிந்து போவார்கள், அதில் ஒரு பிரிவினரைத்தவிர மற்ற அனைவரும் நரகிற்கே செல்வார்கள் ..." (நூல்: அபூ தாவூத், திர்மிதி) &lt;/strong&gt;&lt;/em&gt;என்கிற ஹதீதை உண்மைபடுத்துவதாகத்தான் நீங்கள் எழுதிய கூற்று இருக்கிறது. மேலும் ஒவ்வொரு பிரிவினரும் தன்னை வழிகேட்டில் இருப்பதாக நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மாறாக நாங்கள் தான் நேர்வழியில் இருக்கின்றோம் என்று தான் கூறுவார்கள். அதில் பெரும்பாலோர் குர்ஆன் மற்றும் ஹதீதுகளையே ஆதாரமாக எடுத்து வைப்பர். யார் நேர்வழியைத் தேடி அதனைப் பெற முயற்சி செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அந்த நேர்வழியை இலகுவாக்கி வைப்பான். ஆனால் யார் வழிகேட்டை தேடி அதற்காக முயற்சி செய்கிறார்களோ அவர்களும் குர்ஆனையும் ஹதீதுகளையும் ஆதாரமாகக் காட்டியே மக்களை வழிகெடுப்பார்கள். கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில் அதுபற்றி இறைவன் கூறுகின்றான்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;(இறைவனாகிய) அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கிவைத்தான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. மற்றவை (பல அர்த்தங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் வசனங்கள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு (என்னும் நோய்) இருக்கின்றதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக (பல அர்த்தங்களைக் கொண்ட) முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைகள்தான், நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:7)&lt;/em&gt;&lt;/strong&gt;மேலும் உங்களது எழுத்தாற்றல் சிறந்ததா அல்லது என்னுடைய எழுத்தாற்றல் சிறந்ததா மேலும் வெற்றி பெற்றவன் நீங்களா அல்லது நானா என்பதும் அல்ல எனது வாதம்.&lt;br /&gt;உதாரணத்திற்கு ஒருவர் இஸ்லாத்தைப்பற்றி சொல்வது தவறாக இருந்து அதில் அவர் தோற்றுவிட்டார் என்று வைத்துக்கொண்டால் அவரிடம் எழுத்தறிவில் குறைவு அல்லது இஸ்லாம் பற்றிய முழுமையான ஞானம் இல்லை என்றுதான் அதற்கு அர்த்தமே தவிர இஸ்லாத்தில் குறை என்று அதற்கு அர்த்தமாகாது. ஏனென்று சொன்னால் இணைய தளத்தில் பங்கேற்கும் அனைவரும் இஸ்லாமிய அறிவு முழுமையாக அறிந்தவர்களில்லை. அதில் ஒரு சிலர் தானாகவே வலைப்பதிவின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் ஒப்புக்கொண்டதையும் நீங்கள் படித்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;strong&gt;மேற்கூறப்பட்ட விசயங்கள் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.&lt;/strong&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை குறை கூறி எழுதுகின்றவர்களில் பெரும்பாலோர்களின் பதிவுகளில், அதிகமாக அறிஞர்களின் கருத்தையே மேற்கோள் காட்டுகின்றார்கள். எனது அறிவுக்கு எட்டிய வரையில் எந்த ஒரு முஸ்லிமும் எந்த அறிஞர்களையும் முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டி என்று கூறியதில்லை. அப்படி யாரேனும் எழுதி இருந்தாலும் அதுவும் தவறு தான். முஸ்லிம்களுக்கு வழிகாட்டியெல்லாம் குர்ஆனும் நபி மொழிகளும் தான்.&lt;br /&gt;நேசகுமாருடைய மேலேயுள்ள கேள்விக்கு தற்காலிக பதில் என்னவென்றால் இறைவன் இருக்கின்றான் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் பிறகு ஹதீதுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு கோர்வை செய்யப்பட்டது? எந்த நிபந்தனைக்கு உட்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எந்த நிபந்தனைக்கு மாற்றமாக இருந்தால் அதனை புறக்கணிக்கலாம் என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை நான் (இறைவன் நாடினால்) பின்பொரு பதிவில் எடுத்து வைக்க இருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-111745236792655424?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/111745236792655424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=111745236792655424' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/111745236792655424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/111745236792655424'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2005/05/2.html' title='கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார் - 2'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-111631809504438016</id><published>2005-05-17T01:17:00.000-07:00</published><updated>2005-05-21T03:51:44.540-07:00</updated><title type='text'>அன்புள்ள ஆரோக்கியம் அவர்களுக்கு</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஒரு விசயத்தை விளங்கிக் கொள்வதில் அவரவர் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நம்முடைய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்று நாம் யாருக்கும் நமது கருத்தை திணிக்க முடியாது.&lt;br /&gt;அரபி மொழிதான் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் மூலம், ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இந்த அறிஞர் இந்த கருத்தை சொல்லுகிறார். அந்த அறிஞர் அந்த கருத்தை சொல்லுகிறார் இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் அது போன்ற ஒரு நிகழ்வு நபிகளாரின் ஆட்சிக் காலத்தில் நடந்தது என்று ஆதாரத்தின் மூலம் நிருபித்துக்காட்டுங்கள். பிறகு அதனைப்பற்றி விவாதிப்போம். குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுதான் உங்கள் ஆதாரமாக இருக்க வேண்டுமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை எடுத்து வைக்க கூடாது.&lt;br /&gt;ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவது அல்லாஹ் ஒருவனே அகில உலகத்திற்கும் இறைவன். அல்லாஹ் உடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் என்பதுதான். அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கிவைத்தான் அதில் எந்த வித குறைபாடும் இல்லை, மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே முழு இஸ்லாத்தையும் பரிபூரணப்படுத்திவிட்டான். நபிகளாரின் வாழ்வினிலும் எந்தவித குறைபாடும் இல்லை. நபி அல்லாத மற்றனைவரும் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருக்கும் உத்திர வாதம் கொடுக்க இயலாது.&lt;br /&gt;எனவே அறிஞர்களின் கூற்றை உங்களுடைய ஆதாரமாக வைக்காமல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுகளின் மூலம் உங்கள் ஆதாரத்தை எடுத்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-111631809504438016?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/111631809504438016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=111631809504438016' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/111631809504438016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/111631809504438016'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2005/05/blog-post_17.html' title='அன்புள்ள ஆரோக்கியம் அவர்களுக்கு'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12232190.post-111588900601409792</id><published>2005-05-12T02:05:00.000-07:00</published><updated>2005-05-21T03:51:13.993-07:00</updated><title type='text'>கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;12.05.2005&lt;br /&gt;&lt;strong&gt;சகோதரர்களே விழித்திடுங்கள் !!!&lt;/strong&gt;&lt;br /&gt;இஸ்லாத்தைப்பற்றி மிகவும் அறிந்தவர் போன்று எழுதும் நேசகுமார் அதனுடைய அடிப்படை அறிவு கூட தெரியவில்லை என்பது தான் யதார்த்தம்.&lt;br /&gt;ABCD கூட தெரியாத ஒருவர் ஆங்கிலத்தில் எழுதினால் அல்லது பேசினால் எவ்வாறு இருக்குமொ அவ்வாறுதான் நேசகுமாருடைய எழுத்துக்களும்.&lt;br /&gt;எனக்கு கம்பியூட்டர் பற்றிய அறிவு இல்லை, மேலும் அதைப் படித்தறிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை ஆனால் நான் கம்பியூட்டர் பற்றி நான் உங்களுக்கு பாடம் எடுக்கப் போகிறேன் என்னிடம் வந்து படித்துக் கொள்ளுங்கள் என்று கூறினால் என்னை ஒரு கிறுக்கன் அல்லது பைத்தியக்காரன் என்று தானே நினைப்பீர்கள் அதே போன்றுதான், நேசகுமார் ஹதீதுகள் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது? எப்படிப்பட்ட ஹதீதுகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது எப்படிப்பட்ட ஹதீதுகளை நிராகரித்து விடலாம் என்ற அடிப்படை அறிவு அறவே இல்லை. உதாரணத்திற்கு 1+1 = 2 Decimal கணக்கின் படி அதே சமயம் 1+1 = 10 Binary கணக்கின் படி, Binary கணக்கு தெரியாதவர்களிடம் சென்று 1+1 = 2 தான் வரவேண்டும் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா? இதே போன்று தான் நேசகுமார் தனக்கு தெரிந்து கொண்டே மறைக்கிறார் அல்லது உண்மையை தெரியாமல் உளறி, மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறார். மேலும் ஹதீது சம்பந்தமாக அப்துல்லாஹ்வும், ஸலாஹீத்தீனும் விளக்கம் கொடுத்த பின்னரும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக தொடர்ந்து எழுதித் தள்ளுகிறார் (நிறை குடம் தழும்பாது என்று சொல்வார்கள்.) இது போன்ற அரை குறைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து முதலில் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் அடிப்படைகளை முதலில் படித்துவிட்டு அதன் பின்னர் அதனடிப்படையில் இந்த விவாத களத்திற்கு வந்தால் அது எல்லோருடைய அறிவுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக அமையும்.&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் நல்ல மனிதராக வாழ்ந்துவிட்டு மக்களுக்கு நற்போதனைகளை எல்லாம் வழங்கிவிட்டு சென்றுள்ளார்கள். அதனை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடைமை. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதே போன்றுதான் இஸ்லாத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர், மாணவர்களிடம் திருடாதே, பொய் சொல்லாதே... என்று நல்லுபதேசங்களை செய்த பின்னரும் அந்த மாணவர்கள் திருடினால் அல்லது பொய் சொன்னால் அதற்கு அந்த ஆசிரியர் செய்ததுதான் குற்றம் என்று நேசகுமார் கூறினாலும் அதில் ஆச்சர்யபடுவதிற்கு ஒன்றுமில்லை.&lt;br /&gt;உதாரணத்திற்கு நேசகுமாருடைய 01.03.05 அன்று எழுதிய பதிவிலிருந்து.&lt;br /&gt;"பாகிஸ்தானில் அல்லாஹ்வைத் திட்டினால் ஆயுள் தண்டனை, நபிகள் நாயகத்தைத் திட்டினால் மரண தண்டனை என்பதெல்லாம் இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சிதான்... "&lt;br /&gt;பாகிஸ்தானில் ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதென்றால் அதற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீதுகளிலோ எங்கேனும் இவ்வாறு இருந்தால் அதைப்பற்றி குறிப்பிட்டால்தான் அது உங்களுடைய வாதத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கும். "மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல்" இது போன்ற உதாரணங்களை எழுதுவதை விட்டு விட்டு ஒழுங்கான ஆதாரங்களை குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுகளின் அடிப்படையில் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;???????????????? ??????????? ??????? ??????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12232190-111588900601409792?l=irainesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://irainesan.blogspot.com/feeds/111588900601409792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12232190&amp;postID=111588900601409792' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/111588900601409792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12232190/posts/default/111588900601409792'/><link rel='alternate' type='text/html' href='http://irainesan.blogspot.com/2005/05/blog-post.html' title='கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார்.'/><author><name>இறைநேசன்</name><uri>http://www.blogger.com/profile/15296326743814356577</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry></feed>
