திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

பூமியின் வடிவம்


ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் நம்பிருந்தார்கள். 1607-ல் சர் பிரான்ஸிஸ் டிராக் என்பவர்தான் பூமி கோள வடிவமானது எனக் கண்டுபிடித்தார். இதனை ஜியாய்டு (Geoid) என்ற பதம் கொண்டு குறிப்பர். திருக்குர்ஆன் இதனை அத்தியாயம் 31 வசனம் 29-ல் விளக்குகிறது, "நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புக செய்கின்றான்". இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகச் (நுழையச்) செய்தல் என்பதன் பொருள் சீராக மெதுவாக இரவைப் பகலில் நுழையச் செய்வதென்றால் பூமி தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே விளக்குகிறது. (கோளமாக இருந்தால் தான் மேற்கண்ட செயல் நடை பெற வாய்ப்பிருக்கிறது.) மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 5ஐ பார்த்தால்... அவன் இரவைப் பகலின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான் இன்னும் பகலை இரவின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "கவ்வர" என்ற அரபி வார்த்தையின் பொருள் சுருட்டுதல் என்பதாகும். சுருட்டுதல் எங்கு நடைபெற்றாலும் அது ஒரு கோள வடிவில் தான் நடக்க இயலும்.


தற்போது கண்டிபிடிக்கப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் 1400 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கிறது?


சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் சூரியனின் சிறுவடிவம் தான் சந்திரன் என்றும், இவை இரண்டிற்கும் சொந்தமாக ஒளி வீசும் திறன் உண்டு என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் சூரியனிலிருந்து ஒளியை வாங்கி சந்திரன் பிரதிபலிக்கிறது என்று தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திருமறைக்குர்ஆன் அத்தியாயம் 25 வசனம் 61ஐ கவனித்தோமானால் அதில் "ஒரு விளக்கை(ப் போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் பாக்கியமுடையவன்" எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் சூரியனை சுயமாக ஒளி வீசும்
விளக்கு எனவும் சந்திரனை உள்வாங்கி பிரதிபலிக்கக் கூடியது என்றும் (சந்திரனுக்கு சுயமாக ஒளி வீசும் தன்மை இல்லை என்றும்) விளக்குகிறது.

சூரியனின் சுழற்சி


சூரியன் தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று வருகின்றது. நாம் துல்லியமான தொலைநோக்கி கொண்டு பார்ப்போமானால் சூரியனில் கரும் புள்ளிகள் தெரியும். அதனை நாம் தொடர்ந்து கவனிப்போமானால் அந்தக் கரும்புள்ளிகள் ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்பதை அறியலாம். ஆகவே சூரியன் தன்னைத்தானே சுற்றுவதுடன் அதன் வட்டப் பாதையில் ஒரு முறை சுழன்று வருவதற்கு சுமார் 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என கணக்கிடலாம். இதனைத் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 33-ல் இன்னும் "அவன் எத்தகையவன் என்றால் (அவன்தான்) இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் (தத்தமது) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன" என்றும் கூறுகிறது. இந்த வசனத்தில் சூரியன் சந்திரன் அதனுடைய வட்டப் பாதையில் சுற்றுவதுடன் விண்வெளியில் தங்களுடைய பாதையில் இயக்கம் மேற்கொள்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில்
ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது தான்.

நட்சத்திரத்திற்கும் கோள்களுக்குமிடையிலுள்ள
வித்தியாசம்?


நட்சத்திரங்கள் சூரியனைப் போல் சுய ஒளியை வீசுகின்றது. அதே வேளையில், கோள்கள் நாம் வாழும் பூமியைப் போன்று ஒளி வீசும் தன்மையற்றது என்பதை
நாம் அறிவோம். இந்த விளக்கத்தை தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. நட்சத்திரத்தைப் பற்றி அத்தியாயம் 86 முதல் மூன்று வசனங்கள் கூறுவதை கவனியுங்கள். "வானத்தின் மீதும், இரவில் தோன்றக் கூடியதின் மீதும் சத்தியமாக! இரவில் தோன்றக்கூடியது
என்னவென்று உமக்கு அறிவித்தது எது? பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்" மேலும் கோள்களைப் பற்றி அத்தியாயம் 37, வசனம் 6ல் அருகிலுள்ள வானத்தை கோள்களின் அழகைக் கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம் என்று கோள்களை அணிகலன்களாக வர்ணிக்கின்றது திருக்குர்ஆன்.

கண்டங்கள்

கண்டிப்பாக! ஒரு காலத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பரப்பாகவே
இருந்தது. ஒரு பெரு வெடிப்பிற்கு பிறகு பூமியினுடைய எல்லாப் பகுதிகளும் சிதறடிக்கப்பட்டது. ஆகவே உலகப் படத்தை நீங்கள் பாருங்கள். தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையும் ஒன்றிக்கொன்று பொருந்திக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பதைக் காணலாம். திருகுர்ஆன் 79வது அத்தியாயம் 30, 31வது வசனத்தில் மேலும் பூமியை அதன்பின் அவன் தான் விரித்தமைத்தான். அதிலிருந்து தண்ணீரையும் மேய்ச்சல் பொருளையும் வெளியாக்கினான் என்று விவரிக்கிறது.


புவியின் அடுக்குகள்


மேலும் புவியியலில் புவி அடுக்குகள் பற்றி விஞ்ஞானம்
என்ன கூறுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பூமியின் நிலைப்புத் தன்மைக்கு காரணம் புவியின் மேற்பரப்பு, புவி அடுக்குகளை நிலைபெறச் செய்யவே மலைகள் இருக்கின்றன.


இதனை திருக்குர்ஆன் அத்தியாயம் 78 வசனங்கள் 6, 7-ல் "பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் அமைக்கவில்லையா?" என்று கூறுகிறது. முளைகள் என்று இந்த வசனத்தில் கூறப்படுவதன் பொருள் பூமியில் உள்ள அடுக்குகள் முளைகள் மூலம் ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த முதல் வசனத்தில் பூமி தட்டையானது அல்ல விரிப்பாக உள்ளது எனக் கூறுகிறது. எனவே நாம் கீழே விழுந்து விடாமல் தொடர்ந்து நடக்க இயலும். மேலே சொன்ன இந்த விஷயம் திருக்குர்ஆனில் மேலும் அத்தியாயம் 21 வசனம்
31-ல் "இன்னும் பூமி அவர்களைக் கொண்டு அசைந்து விடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம். அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளை நாம் ஆக்கினோம்". இதில் பூமி அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படாமல் நிலையாக இருக்க இந்த மலைகள் (முளைகள்) உதவி செய்கின்றன. அதன் காரணத்தால் தான் பூமி அதன் வட்டப்பாதையில் சீராக சுழன்று வருகின்றது.


திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. இருப்பினும்
அது அத்தாட்சிகளின் தொகுப்பு
(Book of Signs). உண்மையில் இதில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அத்தாட்சி (வசனங்)களில் ஆயிரம் மட்டுமே விஞ்ஞானத்தை விவரிக்கிறது. மெத்த படித்தவர்களுக்கும் மேலும் கடவுளை நம்பாதவர்களுக்கும் விஞ்ஞானம் தான் ஒரு அளவுகோலாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் தான் அளவுகோளாக அமைந்துள்ளது.


திருக்குர்ஆனை புர்கான் என்றும் அழைக்கிறோம். இந்த அரபி வார்த்தையின் பொருள் என்ன என்றால் சரியென்றும், தவறென்றும் பிரித்து அறிவிக்கக் கூடியது என்பதாகும். படித்த மற்றும் நாத்திகர்களின் அளவுகோலாகிய அறிவியலை வைத்து திருக்குர்ஆனை நான் விளக்கினேன். ஆனால் அறிவியல் சமீப காலத்தில் தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன் 14 நூற்றாண்களுக்கு முன்பே இறக்கியருளப்பட்டது.


இந்த மாதிரி அரிய உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆனில் எழுத படிக்க தெரியாத ஒருவரால் கூறியிருக்க முடியுமா? இதே போல் நவீன அறிவியல் உலகத்தால் மறுக்க இயலாத பல நூற்றுக்கணக்கான விஞ்ஞான உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்திருக்கிறது.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்

முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆனை இறைவனின் வார்த்தை எனவும் பரிசுத்தமான, எவராலும் எப்பொழுதும் மாற்ற இயலாத ஒரு வேதமென்றும் நம்புகின்றோம். மேலும் மலக்குகளின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆன் 23 ஆண்டுகள், சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டு, அவர்களுடைய தூதுத்துவ காலத்திலேயே முழுமைப் படுத்தப்பட்டது என்றும் நம்புகிறோம்....மேலும் இந்தக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் முழுமைப்படுத்தப்பட்டு, இன்று வரை மாற்றப்படாமல் இருக்கின்றது என்பது சரித்திரப் பூர்வமான உண்மையாகும். வரலாற்று ஆய்வாளர்களில் இஸ்லாத்தின் நண்பர்களாகட்டும் அல்லது இஸ்லாத்தின் எதிரிகளாகட்டும் அவர்கள் முயற்சி செய்து இது உண்மையானது தானா என்பதை ஆராயட்டும்...!

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்பதற்காண ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) மற்றும் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory)
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உள்ள நம்பிக்கை போல் கடவுள் இருக்கின்றார் என்பதில் மக்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இருப்பதில்லை. ஒரு நவீன இயந்திரம் அல்லது ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவனை விட வேறு யாரேனும் அதைப் பற்றி; அதிகம் தெரிந்திருக்க இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது என்பது தான் பதிலாக இருக்கும். ஏனென்றால் கண்டுபிடித்தவன் அல்லது உருவாக்கியவனுக்குத்தான் அப்பொருளைப் பற்றிய முழு தொழில் நுட்பமும் தெரியும்.மேலும் இந்த உலகம் அல்லது இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பர்: தற்காலத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆரம்பத்தில் புகை மண்டலமாகத்தான் இருந்தது. இதனை முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) என விஞ்ஞானிகள் கூறுவர். பின்பு இது ஒரு பெருவெடிப்புக்கு (Cosmic or Secondary Explosion) உள்ளாகி சூரியனாகவும், நட்சத்திரங்களாகவும், கோளங்களாகவும் மற்றும் நாம் வாழும் பூமியாகவும் பிரிக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இந்த உண்மை 1973-ல் அறியப்பட்டு பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதனைப் பற்றி திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 21, வசனம் 30-ல் கீழ்கண்டவாறு விவரிக்கிறது."நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன பின்னர் நாமே அவைகளை பிரித்தமைத்தோம்". எனவே பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றி திருக்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போதாத திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதென்பதற்கு.


கடலில் உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றோடொன்று கலப்பதில்லை
விஞ்ஞானிகள், உப்புத் தண்ணீரும், நல்ல தண்ணீரும் ஒன்றுக் கொன்று கலப்பதில்லை எனக் கூறுகின்றனர். இந்த சூழ்நிலை உலகின் பல இடங்களிலும் உள்ளது. நைல் நதியின் மெடிட்டாரினியன் கடலில் கலக்கும் வளைகுடா இதற்கு ஒரு உதாரணமாகும். இதில் இந்த இரண்டு வகையான நீரும் கிட்டத்தட்ட 1000கீ.மீ தூரம் வரை இவ்வாறு செல்கிறது. இதனை திருக்குர்ஆன் 25வது அத்தியாயம் 53வது வசனத்தில் இன்னும் அவன் எத்தகையவனென்றால் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான் ஒன்று மிக்க சுவையானதும், தாகம் தீர்க்கக் கூடியது, மற்றொன்று உப்புக் கரிப்பானதும், கசப்பானதுமாகும். இவ்விரண்டிற்கிடையில் திரையையும் மீற முடியாத தடையையும் அவன் ஆக்கியிருக்கிறான். அத்தியாயம் 55 வசனம் 19,20 ல் இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டுவிட்டான். அவை இரண்டுக்கிடையில் தடுப்புண்டு அவ்விரண்டும் அதனை மீறிவிடாது. என்று மேலும் விளக்குகிறான். சில அரபிகள் கடலில் நீந்திச் சென்று இதனை பார்த்து அறிந்திருப்பார்கள் என்று நினைக்க வாய்ப்புள்ளது ஆனால் "கண்ணால் பார்க்க இயலாத திரை" என்று திருக்குர்ஆன் கூறுவதால் இன்று வரை யாராலும் பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.
மழை நீரின் சுழற்சி
பெர்னாட் பால்ஸி என்பவர் தான் முதலில் 1580-ல் நீரின் தொடரான சுழற்சியைப் பற்றிச் சொன்னார்.இந்த நீரின் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் சுழற்சியினுடைய பல நிலைகளைக் குறிப்பிடுகின்றது. பூமியிலிருந்து தண்ணீர் மேலே சென்று, மேகங்களை உருவாக்கி, மேகங்கள் குளிர்ச்சியடைந்த அந்த நேரத்தில் மின்னல், இடிகளுடன் மழை பெய்வதை பின்வரும் வசனங்களில் விவரிக்கிறது. அத்தியாயம் 23, வசனம் 18ல் "இன்னும் வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், பூமியில் தேக்கி வைத்தோம். நாம் அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றல் உடையவராவோம்." மேலும், அத்தியாயம் 39 வசனம் 21ல் "நீர் பார்க்கவில்லையா? (அல்லாஹ் தான்) வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச்செய்கிறான்". அத்தியாயம் 24 வசனம் 43ல் "நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன் பின் ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர்....."
மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 30 வசனம் 43ல் பார்த்தால், "அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவன் காற்றுகளை அனுப்பி வைக்கின்றான் பின்னர் அவை மேகங்களை ஓட்டுகின்றன. பிறகு தான் நாடியவாறு அதனை வானத்தில் பரத்துகிறான். அதனை பல துண்டுகளாகவும் ஆக்கிவிடுகின்றான், அதன் மத்தியிலிருந்து மழை வெளிவருவதை நீர் காண்கிறீர்..." எனக் கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.