திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

பூமியின் வடிவம்


ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் நம்பிருந்தார்கள். 1607-ல் சர் பிரான்ஸிஸ் டிராக் என்பவர்தான் பூமி கோள வடிவமானது எனக் கண்டுபிடித்தார். இதனை ஜியாய்டு (Geoid) என்ற பதம் கொண்டு குறிப்பர். திருக்குர்ஆன் இதனை அத்தியாயம் 31 வசனம் 29-ல் விளக்குகிறது, "நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புக செய்கின்றான்". இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகச் (நுழையச்) செய்தல் என்பதன் பொருள் சீராக மெதுவாக இரவைப் பகலில் நுழையச் செய்வதென்றால் பூமி தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே விளக்குகிறது. (கோளமாக இருந்தால் தான் மேற்கண்ட செயல் நடை பெற வாய்ப்பிருக்கிறது.) மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 5ஐ பார்த்தால்... அவன் இரவைப் பகலின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான் இன்னும் பகலை இரவின் மீது சுருட்டிக் கொள்ளச் செய்கிறான். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "கவ்வர" என்ற அரபி வார்த்தையின் பொருள் சுருட்டுதல் என்பதாகும். சுருட்டுதல் எங்கு நடைபெற்றாலும் அது ஒரு கோள வடிவில் தான் நடக்க இயலும்.


தற்போது கண்டிபிடிக்கப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில் 1400 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கிறது?


சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் சூரியனின் சிறுவடிவம் தான் சந்திரன் என்றும், இவை இரண்டிற்கும் சொந்தமாக ஒளி வீசும் திறன் உண்டு என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் சூரியனிலிருந்து ஒளியை வாங்கி சந்திரன் பிரதிபலிக்கிறது என்று தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திருமறைக்குர்ஆன் அத்தியாயம் 25 வசனம் 61ஐ கவனித்தோமானால் அதில் "ஒரு விளக்கை(ப் போன்று சூரியனை)யும், பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையவன் பாக்கியமுடையவன்" எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் சூரியனை சுயமாக ஒளி வீசும்
விளக்கு எனவும் சந்திரனை உள்வாங்கி பிரதிபலிக்கக் கூடியது என்றும் (சந்திரனுக்கு சுயமாக ஒளி வீசும் தன்மை இல்லை என்றும்) விளக்குகிறது.

சூரியனின் சுழற்சி


சூரியன் தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று வருகின்றது. நாம் துல்லியமான தொலைநோக்கி கொண்டு பார்ப்போமானால் சூரியனில் கரும் புள்ளிகள் தெரியும். அதனை நாம் தொடர்ந்து கவனிப்போமானால் அந்தக் கரும்புள்ளிகள் ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்பதை அறியலாம். ஆகவே சூரியன் தன்னைத்தானே சுற்றுவதுடன் அதன் வட்டப் பாதையில் ஒரு முறை சுழன்று வருவதற்கு சுமார் 25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது என கணக்கிடலாம். இதனைத் திருக்குர்ஆன் அத்தியாயம் 21 வசனம் 33-ல் இன்னும் "அவன் எத்தகையவன் என்றால் (அவன்தான்) இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் (தத்தமது) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன" என்றும் கூறுகிறது. இந்த வசனத்தில் சூரியன் சந்திரன் அதனுடைய வட்டப் பாதையில் சுற்றுவதுடன் விண்வெளியில் தங்களுடைய பாதையில் இயக்கம் மேற்கொள்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த உண்மை திருக்குர்ஆனில்
ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது தான்.

நட்சத்திரத்திற்கும் கோள்களுக்குமிடையிலுள்ள
வித்தியாசம்?


நட்சத்திரங்கள் சூரியனைப் போல் சுய ஒளியை வீசுகின்றது. அதே வேளையில், கோள்கள் நாம் வாழும் பூமியைப் போன்று ஒளி வீசும் தன்மையற்றது என்பதை
நாம் அறிவோம். இந்த விளக்கத்தை தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது. நட்சத்திரத்தைப் பற்றி அத்தியாயம் 86 முதல் மூன்று வசனங்கள் கூறுவதை கவனியுங்கள். "வானத்தின் மீதும், இரவில் தோன்றக் கூடியதின் மீதும் சத்தியமாக! இரவில் தோன்றக்கூடியது
என்னவென்று உமக்கு அறிவித்தது எது? பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாகும்" மேலும் கோள்களைப் பற்றி அத்தியாயம் 37, வசனம் 6ல் அருகிலுள்ள வானத்தை கோள்களின் அழகைக் கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம் என்று கோள்களை அணிகலன்களாக வர்ணிக்கின்றது திருக்குர்ஆன்.

கண்டங்கள்

கண்டிப்பாக! ஒரு காலத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட நிலப்பரப்பாகவே
இருந்தது. ஒரு பெரு வெடிப்பிற்கு பிறகு பூமியினுடைய எல்லாப் பகுதிகளும் சிதறடிக்கப்பட்டது. ஆகவே உலகப் படத்தை நீங்கள் பாருங்கள். தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையும் ஒன்றிக்கொன்று பொருந்திக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பதைக் காணலாம். திருகுர்ஆன் 79வது அத்தியாயம் 30, 31வது வசனத்தில் மேலும் பூமியை அதன்பின் அவன் தான் விரித்தமைத்தான். அதிலிருந்து தண்ணீரையும் மேய்ச்சல் பொருளையும் வெளியாக்கினான் என்று விவரிக்கிறது.


புவியின் அடுக்குகள்


மேலும் புவியியலில் புவி அடுக்குகள் பற்றி விஞ்ஞானம்
என்ன கூறுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பூமியின் நிலைப்புத் தன்மைக்கு காரணம் புவியின் மேற்பரப்பு, புவி அடுக்குகளை நிலைபெறச் செய்யவே மலைகள் இருக்கின்றன.


இதனை திருக்குர்ஆன் அத்தியாயம் 78 வசனங்கள் 6, 7-ல் "பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் அமைக்கவில்லையா?" என்று கூறுகிறது. முளைகள் என்று இந்த வசனத்தில் கூறப்படுவதன் பொருள் பூமியில் உள்ள அடுக்குகள் முளைகள் மூலம் ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் இந்த முதல் வசனத்தில் பூமி தட்டையானது அல்ல விரிப்பாக உள்ளது எனக் கூறுகிறது. எனவே நாம் கீழே விழுந்து விடாமல் தொடர்ந்து நடக்க இயலும். மேலே சொன்ன இந்த விஷயம் திருக்குர்ஆனில் மேலும் அத்தியாயம் 21 வசனம்
31-ல் "இன்னும் பூமி அவர்களைக் கொண்டு அசைந்து விடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம். அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளை நாம் ஆக்கினோம்". இதில் பூமி அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படாமல் நிலையாக இருக்க இந்த மலைகள் (முளைகள்) உதவி செய்கின்றன. அதன் காரணத்தால் தான் பூமி அதன் வட்டப்பாதையில் சீராக சுழன்று வருகின்றது.


திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. இருப்பினும்
அது அத்தாட்சிகளின் தொகுப்பு
(Book of Signs). உண்மையில் இதில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அத்தாட்சி (வசனங்)களில் ஆயிரம் மட்டுமே விஞ்ஞானத்தை விவரிக்கிறது. மெத்த படித்தவர்களுக்கும் மேலும் கடவுளை நம்பாதவர்களுக்கும் விஞ்ஞானம் தான் ஒரு அளவுகோலாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் தான் அளவுகோளாக அமைந்துள்ளது.


திருக்குர்ஆனை புர்கான் என்றும் அழைக்கிறோம். இந்த அரபி வார்த்தையின் பொருள் என்ன என்றால் சரியென்றும், தவறென்றும் பிரித்து அறிவிக்கக் கூடியது என்பதாகும். படித்த மற்றும் நாத்திகர்களின் அளவுகோலாகிய அறிவியலை வைத்து திருக்குர்ஆனை நான் விளக்கினேன். ஆனால் அறிவியல் சமீப காலத்தில் தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன் 14 நூற்றாண்களுக்கு முன்பே இறக்கியருளப்பட்டது.


இந்த மாதிரி அரிய உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆனில் எழுத படிக்க தெரியாத ஒருவரால் கூறியிருக்க முடியுமா? இதே போல் நவீன அறிவியல் உலகத்தால் மறுக்க இயலாத பல நூற்றுக்கணக்கான விஞ்ஞான உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்திருக்கிறது.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்

முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆனை இறைவனின் வார்த்தை எனவும் பரிசுத்தமான, எவராலும் எப்பொழுதும் மாற்ற இயலாத ஒரு வேதமென்றும் நம்புகின்றோம். மேலும் மலக்குகளின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆன் 23 ஆண்டுகள், சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டு, அவர்களுடைய தூதுத்துவ காலத்திலேயே முழுமைப் படுத்தப்பட்டது என்றும் நம்புகிறோம்....மேலும் இந்தக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் முழுமைப்படுத்தப்பட்டு, இன்று வரை மாற்றப்படாமல் இருக்கின்றது என்பது சரித்திரப் பூர்வமான உண்மையாகும். வரலாற்று ஆய்வாளர்களில் இஸ்லாத்தின் நண்பர்களாகட்டும் அல்லது இஸ்லாத்தின் எதிரிகளாகட்டும் அவர்கள் முயற்சி செய்து இது உண்மையானது தானா என்பதை ஆராயட்டும்...!

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்பதற்காண ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) மற்றும் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory)
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உள்ள நம்பிக்கை போல் கடவுள் இருக்கின்றார் என்பதில் மக்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இருப்பதில்லை. ஒரு நவீன இயந்திரம் அல்லது ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவனை விட வேறு யாரேனும் அதைப் பற்றி; அதிகம் தெரிந்திருக்க இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது என்பது தான் பதிலாக இருக்கும். ஏனென்றால் கண்டுபிடித்தவன் அல்லது உருவாக்கியவனுக்குத்தான் அப்பொருளைப் பற்றிய முழு தொழில் நுட்பமும் தெரியும்.மேலும் இந்த உலகம் அல்லது இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பர்: தற்காலத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆரம்பத்தில் புகை மண்டலமாகத்தான் இருந்தது. இதனை முதன்மை நெருப்புக்கோளம் (Primary Nepula) என விஞ்ஞானிகள் கூறுவர். பின்பு இது ஒரு பெருவெடிப்புக்கு (Cosmic or Secondary Explosion) உள்ளாகி சூரியனாகவும், நட்சத்திரங்களாகவும், கோளங்களாகவும் மற்றும் நாம் வாழும் பூமியாகவும் பிரிக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இந்த உண்மை 1973-ல் அறியப்பட்டு பெரு வெடிப்புக் கொள்கை (Big Bamg Theory) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதனைப் பற்றி திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 21, வசனம் 30-ல் கீழ்கண்டவாறு விவரிக்கிறது."நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன பின்னர் நாமே அவைகளை பிரித்தமைத்தோம்". எனவே பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றி திருக்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போதாத திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதென்பதற்கு.


கடலில் உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றோடொன்று கலப்பதில்லை
விஞ்ஞானிகள், உப்புத் தண்ணீரும், நல்ல தண்ணீரும் ஒன்றுக் கொன்று கலப்பதில்லை எனக் கூறுகின்றனர். இந்த சூழ்நிலை உலகின் பல இடங்களிலும் உள்ளது. நைல் நதியின் மெடிட்டாரினியன் கடலில் கலக்கும் வளைகுடா இதற்கு ஒரு உதாரணமாகும். இதில் இந்த இரண்டு வகையான நீரும் கிட்டத்தட்ட 1000கீ.மீ தூரம் வரை இவ்வாறு செல்கிறது. இதனை திருக்குர்ஆன் 25வது அத்தியாயம் 53வது வசனத்தில் இன்னும் அவன் எத்தகையவனென்றால் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான் ஒன்று மிக்க சுவையானதும், தாகம் தீர்க்கக் கூடியது, மற்றொன்று உப்புக் கரிப்பானதும், கசப்பானதுமாகும். இவ்விரண்டிற்கிடையில் திரையையும் மீற முடியாத தடையையும் அவன் ஆக்கியிருக்கிறான். அத்தியாயம் 55 வசனம் 19,20 ல் இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டுவிட்டான். அவை இரண்டுக்கிடையில் தடுப்புண்டு அவ்விரண்டும் அதனை மீறிவிடாது. என்று மேலும் விளக்குகிறான். சில அரபிகள் கடலில் நீந்திச் சென்று இதனை பார்த்து அறிந்திருப்பார்கள் என்று நினைக்க வாய்ப்புள்ளது ஆனால் "கண்ணால் பார்க்க இயலாத திரை" என்று திருக்குர்ஆன் கூறுவதால் இன்று வரை யாராலும் பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.
மழை நீரின் சுழற்சி
பெர்னாட் பால்ஸி என்பவர் தான் முதலில் 1580-ல் நீரின் தொடரான சுழற்சியைப் பற்றிச் சொன்னார்.இந்த நீரின் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் சுழற்சியினுடைய பல நிலைகளைக் குறிப்பிடுகின்றது. பூமியிலிருந்து தண்ணீர் மேலே சென்று, மேகங்களை உருவாக்கி, மேகங்கள் குளிர்ச்சியடைந்த அந்த நேரத்தில் மின்னல், இடிகளுடன் மழை பெய்வதை பின்வரும் வசனங்களில் விவரிக்கிறது. அத்தியாயம் 23, வசனம் 18ல் "இன்னும் வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், பூமியில் தேக்கி வைத்தோம். நாம் அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றல் உடையவராவோம்." மேலும், அத்தியாயம் 39 வசனம் 21ல் "நீர் பார்க்கவில்லையா? (அல்லாஹ் தான்) வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச்செய்கிறான்". அத்தியாயம் 24 வசனம் 43ல் "நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன் பின் ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர்....."
மேலும் திருக்குர்ஆன் அத்தியாயம் 30 வசனம் 43ல் பார்த்தால், "அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவன் காற்றுகளை அனுப்பி வைக்கின்றான் பின்னர் அவை மேகங்களை ஓட்டுகின்றன. பிறகு தான் நாடியவாறு அதனை வானத்தில் பரத்துகிறான். அதனை பல துண்டுகளாகவும் ஆக்கிவிடுகின்றான், அதன் மத்தியிலிருந்து மழை வெளிவருவதை நீர் காண்கிறீர்..." எனக் கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார் - 2

எனது இந்த பதிவை ஆரம்பிப்பதற்கு முன்னால் முஸ்லிம் நன்பர்களுக்கு அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்பர் மயிலாடுதுறை சிவா May 16, 2005 அன்று எழுதிய "இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா?" என்கிற பதிவு மற்றும் பிற பல பதிவுகளின் பின்னூட்டங்களில் தேவையில்லாமல் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து எழுதியிருந்ததை படித்தேன். ஒரு விசயத்தைப் பற்றி ஆழ்ந்த, தீர்க்கமான அறிவு இல்லாமல் எதையோ நாம் எழுதப் போய் அதில் நாம் சில தவறுகளை செய்து விட்டால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி, மெருகேற்றி இஸ்லாம்தான் அதற்கு காரணம் என்று மக்களை முட்டாளாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது அனைவரும் அறிந்த உண்மையே. எழுதிய அனைவரையும் நான் குறை கூறவில்லை. ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் செய்ததாக மக்களிடையே பரப்பப்படுவதால் நீங்கள் எதை எழுதுகின்றீர்களோ அதனை தீர ஆலோசித்து அல்லது மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனைப் பெற்றபின் வேகத்தை விடுத்து விவேகத்தையும், நிதானத்தையும் கடைபிடித்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முஸ்லாமல்லாத மாற்று மத நன்பர்ளே நடுநிலையுடன் சிந்திக்க வேண்டுகிறேன் !
எந்த மதகோட்பாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது மத கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும் ஒட்டு மொத்த மனித இனம் முழுவதும் ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு உண்மை என்னவென்றால் என்றாவது ஒரு நாள் மனிதன் தன்னுடைய மரணத்தை அடைந்தே தீருவான் என்பதுதான்.
மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதில்தான் அனைவரும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம்.
அதில் ஒன்று ...
மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை என்பதெல்லாம் கிடையாது. இதெல்லாம் பூச்சாண்டி வித்தைகள் தான். மக்களை பயமுறுத்தி தங்களது சுய லாபத்தை அடைவதற்காக செய்த வீண் வேளைகள் தான் .... என்பது போன்று ஒரு சாராரின் வாதம்.
மற்றொன்று ...
மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. இவ்வுலகம் தான் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்காண பரிச்சைக் களம். அதில் நன்மை மற்றும் தீமைகளைப் பற்றி இறைவனின் கோட்பாடுகள் மற்றும் இறைதூதரின் போதனைகளைக் கொண்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளோம். யார் இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு நன்மையை செய்து தீமையை விட்டு தன்னை தடுத்தும் வருகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் என்றும், மாறு செய்பவர்களுக்கு நரகம் ... என்பது போன்று மறுசாராரின் வாதம் அமைந்துள்ளது.
ஒரு வாதத்திற்காக மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்கை இல்லை என்று சொல்வது சரியென்று வைத்துக்கொள்வோமேயானால் அதனால் நஷ்டப்படுவது இரு சாராரும் இல்லை.
அதே சமயத்தில் ...
மறுசாராரின் வாதம் (அதாவது மரணத்திற்கு பிறகு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. இவ்வுலகம் தான் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைக்காண பரிச்சைக் களம்... போன்றவற்றை) சரியென்று வைத்துக்கொண்டால் அதில் நஷ்டப்படுவது நான் மேலே கூறிய முதல் சாரார் தான் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டு நடுநிலைமையுடன் சிந்தித்து செயல்படுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் முஸ்லிம்கள், இஸ்லாம்தான் முழுமனித குலத்திற்கும் நேர்வழிகாட்டி அதுவல்லாத அனைத்தும் வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்கின்றது என்கின்றனர். இஸ்லாத்திற்கு எதிராக எழுதுபவர்கள் மற்றும் அதன் அடிப்படைவாதத்தை குறை கூறுபவர்கள் அனைவரும் இஸ்லாமும் வழிகேட்டின் பக்கமே மக்கள் அனைவரையும் வழிநடத்துகிறது என்கின்றனர். வழிகேடு என்றொன்றிருந்தால் நேர்வழியும் இருக்கத்தானே வேண்டும். எனவே இஸ்லாம் மக்களை வழிகெடுக்கிறதென்றால் மக்களை திசை திருப்ப முயலாமல் உங்களுடைய நேர்வழியையும் ஆதாரத்தின் மூலமாக எடுத்து வையுங்களேன் பார்ப்போம்.
அடுத்தது நேசகுமார் 18.5.05 அன்று எழுதிய பதிவில் கீழ்கண்டவாறு கேள்வி கேட்டிருந்தார்//...ஸஹீயான ஹதீதுகள் இவைதான் என்று முஸ்லிம் சமுதாயம் முழுவதும் ஒப்புக் கொள்ளும் ஒரு பட்டியல் இருக்கிறதா?
எனக்குத் தெரிந்தவரை இப்படியொரு ஒத்த கருத்து இஸ்லாமியர்களிடையே இல்லை. ஒரு சாரார் சொல்வதை மறுசாரார் மறுப்பதும், ஒருவர் அளிக்கும் விளக்கத்தை மற்றவர்கள் மறுப்பதும் ...//
உண்மைதான் நேசகுமார் அவர்களே! முஸ்லிம் சமுதாயம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு பட்டியல் இல்லைதான். மேலும் அப்படி இருக்கவும் வாய்ப்பில்லைதான் ஏனென்று சொன்னால் நம்முடைய (அகில உலகத்திற்கும்) இறை தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அப்படித்தான் முன்னறிப்பு செய்தார்கள் அது என்னவென்றால் "... என்னுடைய சமுதாயத்தினர் 73 பிரிவினராக விரைவில் பிரிந்து போவார்கள், அதில் ஒரு பிரிவினரைத்தவிர மற்ற அனைவரும் நரகிற்கே செல்வார்கள் ..." (நூல்: அபூ தாவூத், திர்மிதி) என்கிற ஹதீதை உண்மைபடுத்துவதாகத்தான் நீங்கள் எழுதிய கூற்று இருக்கிறது. மேலும் ஒவ்வொரு பிரிவினரும் தன்னை வழிகேட்டில் இருப்பதாக நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மாறாக நாங்கள் தான் நேர்வழியில் இருக்கின்றோம் என்று தான் கூறுவார்கள். அதில் பெரும்பாலோர் குர்ஆன் மற்றும் ஹதீதுகளையே ஆதாரமாக எடுத்து வைப்பர். யார் நேர்வழியைத் தேடி அதனைப் பெற முயற்சி செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அந்த நேர்வழியை இலகுவாக்கி வைப்பான். ஆனால் யார் வழிகேட்டை தேடி அதற்காக முயற்சி செய்கிறார்களோ அவர்களும் குர்ஆனையும் ஹதீதுகளையும் ஆதாரமாகக் காட்டியே மக்களை வழிகெடுப்பார்கள். கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில் அதுபற்றி இறைவன் கூறுகின்றான்.
(இறைவனாகிய) அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கிவைத்தான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. மற்றவை (பல அர்த்தங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் வசனங்கள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு (என்னும் நோய்) இருக்கின்றதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக (பல அர்த்தங்களைக் கொண்ட) முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைகள்தான், நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:7)மேலும் உங்களது எழுத்தாற்றல் சிறந்ததா அல்லது என்னுடைய எழுத்தாற்றல் சிறந்ததா மேலும் வெற்றி பெற்றவன் நீங்களா அல்லது நானா என்பதும் அல்ல எனது வாதம்.
உதாரணத்திற்கு ஒருவர் இஸ்லாத்தைப்பற்றி சொல்வது தவறாக இருந்து அதில் அவர் தோற்றுவிட்டார் என்று வைத்துக்கொண்டால் அவரிடம் எழுத்தறிவில் குறைவு அல்லது இஸ்லாம் பற்றிய முழுமையான ஞானம் இல்லை என்றுதான் அதற்கு அர்த்தமே தவிர இஸ்லாத்தில் குறை என்று அதற்கு அர்த்தமாகாது. ஏனென்று சொன்னால் இணைய தளத்தில் பங்கேற்கும் அனைவரும் இஸ்லாமிய அறிவு முழுமையாக அறிந்தவர்களில்லை. அதில் ஒரு சிலர் தானாகவே வலைப்பதிவின் மூலமாகவும், பின்னூட்டங்களின் மூலமாகவும் ஒப்புக்கொண்டதையும் நீங்கள் படித்திருக்கக் கூடும்.
மேற்கூறப்பட்ட விசயங்கள் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.
இஸ்லாத்தை குறை கூறி எழுதுகின்றவர்களில் பெரும்பாலோர்களின் பதிவுகளில், அதிகமாக அறிஞர்களின் கருத்தையே மேற்கோள் காட்டுகின்றார்கள். எனது அறிவுக்கு எட்டிய வரையில் எந்த ஒரு முஸ்லிமும் எந்த அறிஞர்களையும் முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டி என்று கூறியதில்லை. அப்படி யாரேனும் எழுதி இருந்தாலும் அதுவும் தவறு தான். முஸ்லிம்களுக்கு வழிகாட்டியெல்லாம் குர்ஆனும் நபி மொழிகளும் தான்.
நேசகுமாருடைய மேலேயுள்ள கேள்விக்கு தற்காலிக பதில் என்னவென்றால் இறைவன் இருக்கின்றான் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் பிறகு ஹதீதுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு கோர்வை செய்யப்பட்டது? எந்த நிபந்தனைக்கு உட்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எந்த நிபந்தனைக்கு மாற்றமாக இருந்தால் அதனை புறக்கணிக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை நான் (இறைவன் நாடினால்) பின்பொரு பதிவில் எடுத்து வைக்க இருக்கிறேன்.

அன்புள்ள ஆரோக்கியம் அவர்களுக்கு

ஒரு விசயத்தை விளங்கிக் கொள்வதில் அவரவர் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நம்முடைய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்று நாம் யாருக்கும் நமது கருத்தை திணிக்க முடியாது.
அரபி மொழிதான் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் மூலம், ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இந்த அறிஞர் இந்த கருத்தை சொல்லுகிறார். அந்த அறிஞர் அந்த கருத்தை சொல்லுகிறார் இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் அது போன்ற ஒரு நிகழ்வு நபிகளாரின் ஆட்சிக் காலத்தில் நடந்தது என்று ஆதாரத்தின் மூலம் நிருபித்துக்காட்டுங்கள். பிறகு அதனைப்பற்றி விவாதிப்போம். குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுதான் உங்கள் ஆதாரமாக இருக்க வேண்டுமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை எடுத்து வைக்க கூடாது.
ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவது அல்லாஹ் ஒருவனே அகில உலகத்திற்கும் இறைவன். அல்லாஹ் உடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் என்பதுதான். அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கிவைத்தான் அதில் எந்த வித குறைபாடும் இல்லை, மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே முழு இஸ்லாத்தையும் பரிபூரணப்படுத்திவிட்டான். நபிகளாரின் வாழ்வினிலும் எந்தவித குறைபாடும் இல்லை. நபி அல்லாத மற்றனைவரும் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருக்கும் உத்திர வாதம் கொடுக்க இயலாது.
எனவே அறிஞர்களின் கூற்றை உங்களுடைய ஆதாரமாக வைக்காமல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுகளின் மூலம் உங்கள் ஆதாரத்தை எடுத்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார்.

12.05.2005
சகோதரர்களே விழித்திடுங்கள் !!!
இஸ்லாத்தைப்பற்றி மிகவும் அறிந்தவர் போன்று எழுதும் நேசகுமார் அதனுடைய அடிப்படை அறிவு கூட தெரியவில்லை என்பது தான் யதார்த்தம்.
ABCD கூட தெரியாத ஒருவர் ஆங்கிலத்தில் எழுதினால் அல்லது பேசினால் எவ்வாறு இருக்குமொ அவ்வாறுதான் நேசகுமாருடைய எழுத்துக்களும்.
எனக்கு கம்பியூட்டர் பற்றிய அறிவு இல்லை, மேலும் அதைப் படித்தறிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை ஆனால் நான் கம்பியூட்டர் பற்றி நான் உங்களுக்கு பாடம் எடுக்கப் போகிறேன் என்னிடம் வந்து படித்துக் கொள்ளுங்கள் என்று கூறினால் என்னை ஒரு கிறுக்கன் அல்லது பைத்தியக்காரன் என்று தானே நினைப்பீர்கள் அதே போன்றுதான், நேசகுமார் ஹதீதுகள் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது? எப்படிப்பட்ட ஹதீதுகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது எப்படிப்பட்ட ஹதீதுகளை நிராகரித்து விடலாம் என்ற அடிப்படை அறிவு அறவே இல்லை. உதாரணத்திற்கு 1+1 = 2 Decimal கணக்கின் படி அதே சமயம் 1+1 = 10 Binary கணக்கின் படி, Binary கணக்கு தெரியாதவர்களிடம் சென்று 1+1 = 2 தான் வரவேண்டும் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா? இதே போன்று தான் நேசகுமார் தனக்கு தெரிந்து கொண்டே மறைக்கிறார் அல்லது உண்மையை தெரியாமல் உளறி, மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறார். மேலும் ஹதீது சம்பந்தமாக அப்துல்லாஹ்வும், ஸலாஹீத்தீனும் விளக்கம் கொடுத்த பின்னரும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக தொடர்ந்து எழுதித் தள்ளுகிறார் (நிறை குடம் தழும்பாது என்று சொல்வார்கள்.) இது போன்ற அரை குறைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து முதலில் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் அடிப்படைகளை முதலில் படித்துவிட்டு அதன் பின்னர் அதனடிப்படையில் இந்த விவாத களத்திற்கு வந்தால் அது எல்லோருடைய அறிவுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக அமையும்.
நபி (ஸல்) அவர்கள் நல்ல மனிதராக வாழ்ந்துவிட்டு மக்களுக்கு நற்போதனைகளை எல்லாம் வழங்கிவிட்டு சென்றுள்ளார்கள். அதனை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடைமை. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதே போன்றுதான் இஸ்லாத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர், மாணவர்களிடம் திருடாதே, பொய் சொல்லாதே... என்று நல்லுபதேசங்களை செய்த பின்னரும் அந்த மாணவர்கள் திருடினால் அல்லது பொய் சொன்னால் அதற்கு அந்த ஆசிரியர் செய்ததுதான் குற்றம் என்று நேசகுமார் கூறினாலும் அதில் ஆச்சர்யபடுவதிற்கு ஒன்றுமில்லை.
உதாரணத்திற்கு நேசகுமாருடைய 01.03.05 அன்று எழுதிய பதிவிலிருந்து.
"பாகிஸ்தானில் அல்லாஹ்வைத் திட்டினால் ஆயுள் தண்டனை, நபிகள் நாயகத்தைத் திட்டினால் மரண தண்டனை என்பதெல்லாம் இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சிதான்... "
பாகிஸ்தானில் ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதென்றால் அதற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீதுகளிலோ எங்கேனும் இவ்வாறு இருந்தால் அதைப்பற்றி குறிப்பிட்டால்தான் அது உங்களுடைய வாதத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கும். "மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல்" இது போன்ற உதாரணங்களை எழுதுவதை விட்டு விட்டு ஒழுங்கான ஆதாரங்களை குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீதுகளின் அடிப்படையில் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.