பலதார மணம் - 2

ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?

என்னுடைய முந்தைய பதிவில் ஒரே சமயத்தில் பெண்கள் பல ஆண்களைத் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை விரிவாகக் கண்டோம்.

அடுத்ததாக, ஆண்கள் பலதார மணம் செய்வதைப் பற்றித் தர்க்க ரீதியான காரணங்களை முதலில் பார்த்து விட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதையும் பார்ப்போம்.

உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

தனக்குத் திருமணமே நடக்காது என்றெண்ணித் தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

தம் பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாறிக் கற்பிழந்து வருகின்றனர்.
மேலும் உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய மனமில்லாத அயல் விரும்பி விபச்சாரன்களின் உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரித்து வருகிறது.

இயற்கையிலேயே ஆணிணமும் பெண்ணிணமும் பெரும்பாலும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தியுடன் எதிர்க்கும் தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் மரணிப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தாம் அதிகமாக மரணிக்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

3 பின்னூட்டங்கள்:

said...

நல்ல பதிவுதான்.., ஆனால் நாடெங்கும் அக்கிரமங்களும் அநியாயங்களும் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் இப்படி ஒரு பதிவைப்போட்டிருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது...

மனிதன் என்பவன் ஆறறிவு படைத்த விலங்கு என்பதை அவ்வப்போது நாமும் நிரூபித்து விடுகிறோம். விலங்குகள் கூட சில சமயங்களில் ஒரு துணையுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிவதுண்டு.

நீங்கள் ஆண்களில் பலதார மணத்திற்கு ஏன் இஸ்லாமை அழைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. மாறாக இந்துத்துவம் ஒரு மனைவியை மட்டுமே வலியுறுத்துகிறது.

நண்பர் பாரதி அவர்கள் சொன்னதுபோல நீங்கள் உடலியல் ரீதியாக மட்டுமே பார்த்தீர்கள் என்றால் அது என்னவோ எனக்கு அருவெறுப்பாய் இருக்கிறது... இதில் மனிதன் விலங்கிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறான் ...?

எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணிடம் தவறான உறவு இருக்கிறது என்பதை ஜீரணிப்பதே கஷ்டமான விசயமாகும். அந்தப் பெண் மன ரீதியாக எவ்வளவு விஷயங்களை யோசிப்பாள் என்பதை நீங்கள் கருத்தில கொண்டீர்களா...?

>>
ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது. >>

இவர்கள் எந்தெந்த பிரச்சனைகளை கணக்கில் கொண்டு பலதார மணத்தை தீர்வாகச் சொன்னார்கள்...? ஒருவேளை அந்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம், ஆனால் கலாச்சார தொட்டிலாக இருக்கும் நம் நாட்டிற்கு அவர்களின் முடிவு சரியாக இராது. கலாச்சாரம் ஒருபுறம் இருக்கட்டும், எத்துணை பேர் ஒழுங்காக இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு சத்தமாக கேட்கிறது...

குடும்பம் என்பது கணவன் அல்லது மனைவியின் தனிப்பட்ட விசயம் அல்ல. அது இருவரும் சேர்ந்து முடிவெடுத்து வாழுதல். இதில் கணவனின் மறுமணம் என்பது, அவனின் தனிப்பட்ட விருப்பமாகவே தெரிகிறது. இதற்கு மேல் இதை குடும்பம் என்றே சொல்ல முடியாது...

நீங்கள் சொல்லும் புள்ளி விவரங்களும், மேற்கோள்களும் விவாதங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்... ஏற்கனவே சமுதாயம் கெட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய எண்ணங்கள் மேலும் சமுதாயச் சீரழிவுக்குத்தான் வழிவகுக்கும்.

அதை விடுத்து... நண்பர் பாரதி சொன்னது போல் சமுதாய முன்னேற்றத்துக்கு வழிகாட்டும்படி விதவைத் திருமணமும், வரதட்சணை ஒழிப்பதுவும் சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டுவரும்..

உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறோம்.

அன்புடன்,
மனசு.

said...

மரியாதைக்குரிய பாரதி அவர்களுக்கு,
கண்ணியமான முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தமைக்காக முதலில் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

//தாம்பத்தியம் என்பது உடலியல் மட்டுமே சம்பந்தப்பட்டதாக எப்படித் தோன்றியது உங்களுக்கு? (அல்லது நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் தளத்திற்கு). இத்தகு நீதிகளை நிர்ணயிப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்? அவர்களில் பெண்கள் எத்தணை பேர்? அவரவர்களின் தகுதிகள் என்ன? இதற்கு மதச்சாயம் பூசியது யார்? உடலியலை வைத்து முடிவு செய்கையில் உளவியலை ஏன் முக்கியத்துவம் அளிக்கவில்லை? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.//

முதலில் தாம்பத்தியம் என்பது உடலியல் சம்பந்தம் மட்டுமே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் கூறவேயில்லை. ஆனால் உடலியல் உறவு என்பது தேவையில்லையாயின் திருமணத்திற்காண அவசியமே இல்லை என்று தான் கூறவேண்டும். அன்பு, பண்பு, பாசம், நேசம், போன்ற காரணங்களுக்காக மட்டும் (உடலியல் உறவு தேவையில்லை என்று கூறி) திருமணம் செய்தவர்களின் பட்டியலை எடுத்து வைத்திருந்தால் உங்களுடைய கருத்தில் நியாயம் இருந்திருக்கும்.

//பலதார மணம் விடுத்து, விதவை மறுமணம் பற்றியோ வரதட்சணை ஒழிப்பு பற்றியோ ஒரு நடைமுறைத் தீர்வினை நீங்கள் வைத்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.//

நிச்சயமாக விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை வரவேற்கிறேன். மேலும் வரதட்சணை ஒழிக்கப்படவேண்டும் என்பதிலும் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் நம்மிடம் இல்லை.

இது போக, பலதார மணம் சம்பந்தமான உங்களுடைய சந்தேகங்களுக்கு பின் வர இருக்கும் பதிவுகளிலிருந்து உங்களுக்கு தகுந்த விடை கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

said...

வருகை தந்த 'மனசு' அவர்களுக்கு நன்றி.

//மனிதன் என்பவன் ஆறறிவு படைத்த விலங்கு என்பதை அவ்வப்போது நாமும் நிரூபித்து விடுகிறோம். விலங்குகள் கூட சில சமயங்களில் ஒரு துணையுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிவதுண்டு.//

சம்பந்தமே இல்லாத பத்தி என்று தான் தோன்றுகிறது.

//நீங்கள் ஆண்களில் பலதார மணத்திற்கு ஏன் இஸ்லாமை அழைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. மாறாக இந்துத்துவம் ஒரு மனைவியை மட்டுமே வலியுறுத்துகிறது.//

எனது கருவிப்பட்டையில் ஆன்மீகம் என்று தான் உள்ளது. மேலும் இதற்கான பதிலை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.

//எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணிடம் தவறான உறவு இருக்கிறது என்பதை ஜீரணிப்பதே கஷ்டமான விசயமாகும். அந்தப் பெண் மன ரீதியாக எவ்வளவு விஷயங்களை யோசிப்பாள் என்பதை நீங்கள் கருத்தில கொண்டீர்களா...?//

வைப்பாட்டி, சின்ன வீடு என்பது தவறான உறவா? அல்லது பலதார மணம் என்பது தவறான உறவா? சிந்திக்க வேண்டுகிறேன்.

இது போக, பலதார மணம் சம்பந்தமான உங்களுடைய சந்தேகங்களுக்கு பின் வர இருக்கும் பதிவுகளிலிருந்து உங்களுக்கு தகுந்த விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.